தாய்பால் அருந்திய பச்சிளம் குழந்தை! உடல் சிவப்பாக மாறி உயிருக்கு போராட்டம்!

Published:

baby 2 - 2026

பிரேசில் சாவோ பாலோ பகுதியை சேர்ந்தவர் எல்விஸ். அவரது மனைவி கிறிஸ்டினா மார்க்ஸ். அவர்களுக்கு லூகாஸ் என்ற கைக்குழந்தை உள்ளது.

திடீரென குழந்தையின் உடல் முழுவதும் சிவப்பு நிறமாக மாற துவங்கியது. மேலும் குழந்தை சுவாசிக்க முடியாமல் திணறியுள்ளது.

பதறிப்போன தம்பதியினர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இருந்த மூன்று காவல்துறையினர் குழந்தையின் நிலையை கண்டு அதற்கு முதலுதவி அளிக்க முன்வந்தனர்.

அப்பொழுது ஒருவர் குழந்தையின் சுவாச நிலையை கவனித்து, முதலுதவி அளித்துக் கொண்டிருக்கும் நிலையில் குழந்தைக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.

baby 1 1 - 2026

பெண் அதிகாரி குழந்தையின் வாயில் வாய் வைத்து சுவாசமூட்ட முயற்சி செய்துள்ளார். மேலும் மற்றொருவர் முதுகில் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து ஒரு சில நிமிடங்களிலேயே குழந்தை நலமடைந்தது.

இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சில நிமிடங்களிலேயே குழந்தையின் உடல் முழுவதும் சிவப்பு நிறமாக மாறி, மூச்சு விட பெருமளவில் சிரமபட்டதாக கூறியுள்ளனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img