கத்தாரில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடால் தவிக்கும் மக்கள்: இந்தியர்கள் நிலை என்ன?

qatar-people-rush-mall
தோஹா:

வளைகுடா நாடுகளில் ஒன்றான காத்தாரில், அதன் அண்டை நாடுகளுடனான உறவு மோசமடைந்து சீர்கெட்டுள்ளது. கத்தாருடன் மற்ற வளைகுடா நாடுகள் பிணக்கம் காட்டியதால், கத்தார் தனிமைப்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கே அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்ற அச்சத்தால், முன்னதாகவே தயார் செய்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக சூப்பர் மார்கெட்களுக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே, அங்கே பொருள்கள் வேகமாக காலியாகி வருகின்றன. கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருள்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. எனவே, சூபர் மார்க்கெட்டுகளுக்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

கத்தார் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பெரும்பாலும் சவூதி அரேபியா வழியாகவே வரும். இந்நிலையில், கத்தாருடன் உறவை துண்டித்துள்ள சவூதி அரேபியா, அந்நாட்டுடனான சாலை, கடல், விமான வழித்தடங்களை நிறுத்தி விட்டதால் பொருள்கள் வரத்து நின்று போயுள்ளது. வழக்கமாக பரபரப்பாகக் காணப்படும் தோகாவின் ஹம்தா சர்வதேச விமான நிலையம் இப்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தங்கள் நாட்டு வான் எல்லையில், கத்தார் விமானங்கள் பறக்கக்கூடாது என்று கத்தார் ஏர்வேஸுக்கு சவூதி அரசு தடை விதித்துள்ளது. இதனால் ரியாத் உள்ளிட்ட விமான நிலையங்களில் மக்கள் பலர் தவித்து வருகின்றனர். தற்போது, கத்தாரில் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நாணயங்கள் செல்லாக்காசாகி விட்டன. இந்நிலையில் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளில் இருந்து இன்னும் 2 வார காலத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கெடு விதித்துள்ளனர்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

கத்தாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அடுத்து துபையில் பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் பலர் அங்கே பின் வாங்கியுள்ளதால் பங்குச் சந்தை 7.5% வீழ்ச்சி கண்டுள்ளது.

கத்தார் நாட்டில் மொத்தமுள்ள 6.5 லட்சம் இந்தியர்களில் 3.5 லட்சம் பேர் கேரள மாநிலத்தவர்கள். இங்கிருந்து இந்தியாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு இரு நகர விமான நிலையங்களுக்கும் தினசரி விமான சேவையும், கொச்சினுக்கு வாராந்திர சேவைகளும் உண்டு. விமான சேவைகள் முடங்கியுள்ளதால், கத்தாரில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப பலரும் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே இந்தப் பிரச்னைக்கு மூலகாரணமே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் என்று வளைகுடா நாடுகளில் விமர்சனம் எழுந்துள்ளது. அண்மையில் சவூதி அரேபியா பயணம் செய்த ட்ரம்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மேற்காசிய விவகாரங்களை அலசுபவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories