April 27, 2025, 10:29 PM
30.2 C
Chennai

காலணிகளுடன் கோயிலுக்குள் போலீஸார்… கண்டிக்கிறது சிவசேனை!

temple boots police
temple boots police

காலணிகளுடன் போலீஸார் கோயிலுக்குள் புகுந்ததை வன்மையாகக் கண்டிப்பதாக, இலங்கை, சிவசேனையின் சார்பில், மறவன்புலவு க சச்சிதானந்தன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…

  • திருக்கோயில்களிலும் திருவீதிகளிலும் செய்யத் தகுந்தன, தகாதன.
  • பற்பல நூற்றாண்டுகளாகச் சைவர்கள் படிப்படியாக வளர்த்தெடுத்த விதிமுறைகள்.
  • நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுக நாவலர் பெருமான் பட்டியலிட்டுப் பிரசுரமாக வெளியிட்டார்.

அவர் காலத்தில் தமிழ் மரபுகள் சைவ மரபுகள் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தன. போர்த்துக்கேயரின் மேலாதிக்கம் ஒல்லாந்தரின் மேலாதிக்கம் தொடர்ந்த ஆங்கிலேயரின் ஆதிக்கம் மக்களின் மனநிலையில் அடிமை மோகத்தை விதைத்திருந்தது.

முள்முடித் தீநுண்மியான கொரோனாவில் இருந்து காக்கத் தூய்மையான சமூக இடைவெளி, கைகழுவுதல் என நாம் கைக்கொள்வன விதிமுறைகள்.

திருக்கோயிலிலும் இத்தகைய தூய்மை பேணும் விதி முறைகள் இருந்தன, இருக்கின்றன மரபுவழியாக தொடர்வன.

காலணி இன்றியே புத்த சைவ முகமதிய வழிபாட்டிடங்களுள் புகலாம்.

temple boots police
temple boots police

அரசின் காவலரும் படையினரும் நயினாதீவு அருள்மிகு நாகபூசணி அம்மன் கோயில் வளாகத்துள் காலணியைக் கழற்றி வைக்காமல் புகுந்தனர் என்ற செய்தியைப் படித்ததும் சைவ உலகம் நெஞ்சு பதைபதைத்து மனம் புண்ணாகி வேதனை அடைந்தது.

ALSO READ:  IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

விதிகளைப் பேணுமாறு குடிமக்களிடம் நெருக்குகிற காவல்துறை அதிகாரிகளே இவ்வாறு நடந்து கொண்டார்கள். சைவமும் புத்தமும் 2500 ஆண்டுகளாகப் பேணும் நடைமுறைகளை மறந்தார்கள்.

கண்டி தலதா மாளிகைக்குள் இவ்வாறு போவார்களா? சிற்றூரில் உள்ள புத்த பன்சாலைக்குள் இவ்வாறு போவார்களா?

தமிழ்ச் சைவ நிலப்பகுதிகள் அடிமை கொண்ட நிலப்பகுதிகள் என்று கருதியே இவ்வாறு எதேச்சாதிகாரம் ஆகக் காவலர் நடந்து கொள்கிறார்கள். சைவர்களின் மனதைப் புண்படுத்து கிறார்கள். சைவ உலகத்தின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவ்வாறு செய்த காவல்துறை அதிகாரிகள் தம் தவறை உணர்வார்களாக. அவர்களே அதற்குரிய பிராயச்சித்த பரிகார பூசைகளை செய்வார்களாக. அந்தப் பாவங்களை அவர்கள் சுமந்து அவர்கள் வாழ்வு கெடாமல் இருப்பதற்கு வழிபாடே ஒரே வழி… – என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

Topics

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

Entertainment News

Popular Categories