காலணிகளுடன் கோயிலுக்குள் போலீஸார்… கண்டிக்கிறது சிவசேனை!

temple boots police
temple boots police

காலணிகளுடன் போலீஸார் கோயிலுக்குள் புகுந்ததை வன்மையாகக் கண்டிப்பதாக, இலங்கை, சிவசேனையின் சார்பில், மறவன்புலவு க சச்சிதானந்தன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…

  • திருக்கோயில்களிலும் திருவீதிகளிலும் செய்யத் தகுந்தன, தகாதன.
  • பற்பல நூற்றாண்டுகளாகச் சைவர்கள் படிப்படியாக வளர்த்தெடுத்த விதிமுறைகள்.
  • நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுக நாவலர் பெருமான் பட்டியலிட்டுப் பிரசுரமாக வெளியிட்டார்.

அவர் காலத்தில் தமிழ் மரபுகள் சைவ மரபுகள் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தன. போர்த்துக்கேயரின் மேலாதிக்கம் ஒல்லாந்தரின் மேலாதிக்கம் தொடர்ந்த ஆங்கிலேயரின் ஆதிக்கம் மக்களின் மனநிலையில் அடிமை மோகத்தை விதைத்திருந்தது.

முள்முடித் தீநுண்மியான கொரோனாவில் இருந்து காக்கத் தூய்மையான சமூக இடைவெளி, கைகழுவுதல் என நாம் கைக்கொள்வன விதிமுறைகள்.

திருக்கோயிலிலும் இத்தகைய தூய்மை பேணும் விதி முறைகள் இருந்தன, இருக்கின்றன மரபுவழியாக தொடர்வன.

காலணி இன்றியே புத்த சைவ முகமதிய வழிபாட்டிடங்களுள் புகலாம்.

temple boots police
temple boots police

அரசின் காவலரும் படையினரும் நயினாதீவு அருள்மிகு நாகபூசணி அம்மன் கோயில் வளாகத்துள் காலணியைக் கழற்றி வைக்காமல் புகுந்தனர் என்ற செய்தியைப் படித்ததும் சைவ உலகம் நெஞ்சு பதைபதைத்து மனம் புண்ணாகி வேதனை அடைந்தது.

விதிகளைப் பேணுமாறு குடிமக்களிடம் நெருக்குகிற காவல்துறை அதிகாரிகளே இவ்வாறு நடந்து கொண்டார்கள். சைவமும் புத்தமும் 2500 ஆண்டுகளாகப் பேணும் நடைமுறைகளை மறந்தார்கள்.

கண்டி தலதா மாளிகைக்குள் இவ்வாறு போவார்களா? சிற்றூரில் உள்ள புத்த பன்சாலைக்குள் இவ்வாறு போவார்களா?

தமிழ்ச் சைவ நிலப்பகுதிகள் அடிமை கொண்ட நிலப்பகுதிகள் என்று கருதியே இவ்வாறு எதேச்சாதிகாரம் ஆகக் காவலர் நடந்து கொள்கிறார்கள். சைவர்களின் மனதைப் புண்படுத்து கிறார்கள். சைவ உலகத்தின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவ்வாறு செய்த காவல்துறை அதிகாரிகள் தம் தவறை உணர்வார்களாக. அவர்களே அதற்குரிய பிராயச்சித்த பரிகார பூசைகளை செய்வார்களாக. அந்தப் பாவங்களை அவர்கள் சுமந்து அவர்கள் வாழ்வு கெடாமல் இருப்பதற்கு வழிபாடே ஒரே வழி… – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories