December 6, 2025, 3:31 AM
24.9 C
Chennai

ஒரு வருடம் திட்டமிட்டு திருட்டு! இந்திய தம்பதியினரை கொன்ற பாகிஸ்தானி!

pakistany

துபாயில் இந்திய தம்பதியினர் வசிக்கும் வீட்டில் திருட நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் அந்த தம்பதியினரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இந்தியாவை சேர்ந்த ஹிரன் ஆதியா, மனைவி வித்தி ஆதியா மற்றும் 18 மற்றும் 13 வயதுடைய மகள்களுடன் வசித்து வந்தார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 18ம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த நபர், வீட்டிற்குள் திருட நுழைந்துள்ளார். முதலில், 2,000 திர்ஹாம் இந்திய மதிப்பில் 41,229 ரூபாய் இருந்த பர்சை திருடியுள்ளார். தொடர்ந்து வீட்டில் விலை உயர்ந்த பொருள் உள்ளதா என தேடியுள்ளார்.

அப்போது சத்தம் கேட்டு ஹிரன் மற்றும் வித்தி, ஒருவர் பின் ஒருவராக எழுந்தனர். இதனை கண்ட, குற்றவாளி இருவரையும் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த அவர்களது 18 வயது மகளின் கழுத்தில் திருடன் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். கழுத்தில் லேசான காயமடைந்த அவர், காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கிடந்த கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை கண்டுபிடித்தனர். பின்னர் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ததுள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள துபாய் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநரின் உதவியாளர் கர்னல் அடில் அல் ஜோக்கர், கைது செய்யப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் இந்த திருட்டு சம்பவத்தை திட்டமிட்டு செய்ததாக கூறிய அவர், குற்றவாளி ஒரு வருடத்திற்கு முன்பாக ஹிரன் வீட்டில் வேலை செய்ததாக கூறினார். மேலும் அப்போதே வீட்டில் அதிக பணம் இருப்பதை பார்த்து அதனை திருடும் எண்ணம் குற்றவாளிக்கு ஏற்பட்டதாக கூறினார். இதற்காக திட்டமிட்டு ஒருவருடம் கழித்து இந்த குற்றச்செயலில் குற்றவாளி ஈடுபட்டுள்ளதாகவும் கர்னல் அடில் அல் ஜோக்கர் கூறினார்.

இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனவும் கொலைசெயப்பட்ட தம்பதியினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளோம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories