பாகிஸ்தானில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

death-row-sentenced: கராச்சி: பாகிஸ்தானில் குற்றவாளிகள் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. இன்று 14 பேர் தூக்கிலிடப் படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முல்தான் மற்றும் தேரா காஸி கான் சிறைகளில் இருந்த இருவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், 12 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர். பயங்கரவாதம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட இவர்களுக்கான தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது. இதைத் தொடர்ந்து இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். முன்னதாக, பெஷாவரில் ராணுவப் பள்ளி மீது தாலிபன் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 140-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 150 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரத் தாக்குதலை அடுத்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின், தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்கியது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் சுமார் 8 ஆயிரம் பேர் தூக்கு தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். அவர்களில், பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து, தற்போது பிற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இன்று, பாகிஸ்தானின் ஜனாக், கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, முல்தான், மயின்வாலி, பைசாலாபாத், குரன்வாலா ஆகிய பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories