ரஷ்ய பெண் ஒருவர் தன் குழந்தைகளை ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்த்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் செசன்யா மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7, 8 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நெதர்லாந்தின் மான்செஸ்டர் நகரில் வசித்து வந்த இவர்களிடையே ஏற்பட்ட பிணக்கால் இருவரும் பிரிந்துள்ளனர். அந்தப் பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது 2 பெண் குழந்தைகளை, கிரீஸ் நாட்டுக்கு விமானம் மூலம் கடத்திச் சென்றுள்ளார். அங்கிருந்து சில ஐரோப்பிய நாடுகளைக் கடந்து, ஐ.எஸ்-யின் தலைமையகமாக விளங்கும் சிரியாவின் ரக்கா நகரத்துக்குச் சென்றுள்ளார். அங்கே தனது குழந்தைகளை ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துள்ளார். இந்தத் தகவலை நெதர்லாந்து அரசு உறுதி செய்துள்ளது. https://www.youtube.com/watch?v=bEuBoRAJBRw
ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்க குழந்தைகளுடன் சென்ற தாய்
Popular Categories


