விமானத்தில் சிறுமியுடன் பறந்த பணக்காரர்! நிர்வாணமாய் புகைப்படம் எடுத்து..

Published:

stebhan

அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் கோடீஸ்வரர் தன்னை விடுவிக்க கோரி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரும் கோடீஸ்வரரான ஸ்டீபன் பிராட்லி மெல் (54) கடந்த 2017ல் 15 வயது சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். பின்னர் அதே ஆண்டு இரு முறை சிறுமியுடன் ஸ்டீபன் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

அதே போல கடந்த 2019ல் தனக்கு சொந்தமான தனி விமானத்தில் சிறுமியுடன் பயணித்த ஸ்டீபன் அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இதோடு சிறுமியை நிர்வாணமாக புகைப்படங்களும் எடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் ஸ்டீபன் -ஐ போலிசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஸ்டீபன் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்சமயம் ஸ்டீபன் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தன் மீது இரக்கப்பட்டு தன்னை சிறையில் இருந்து விடுவிக்க ஸ்டீபன் கோரியுள்ளார். அந்த மனுவில், எனக்கு உடல் நலக்கோளாறுகள் உள்ளன, நான் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவிடுவேன் என அஞ்சுகிறேன். என் மீது இரக்கம் கொண்டு சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

பல தோல்வியுற்ற கோரிக்கைகளுக்குப் பிறகு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய ஸ்டீபன் மனு பரிசீலனையில் வருகிறது. இந்த மனு நிராகரிக்கப்பட்டால் ஸ்டீபன் 2025 மே 7ஆம் திகதி வரை சிறையில் இருந்து வெளியில் வரமுடியாது என தெரியவந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img