December 6, 2025, 4:11 PM
29.4 C
Chennai

ஈரான் பயணிகள் விமானத்தை கடத்த முயற்சி! பிடிப்பட்ட நபர்!

Iran plane - 2025

ஈரானில் பயணிகள் விமானத்தை கடத்த திட்டமிட்ட நபரை ஈரான் புரட்சிகர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஈரானில் உள்ள அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று மஷாத் என்ற நகருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு 10.10 புறப்பட்டு சென்றது. ஆனால் புறப்பட்டு சென்ற விமானம் ஈரானில் உள்ள இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், விமானத்தில் பயணி ஒருவர் சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.

அவரிடம் விமான அதிகாரிகள் விசாரித்துள்ளனர். ஆனால் அந்த நபர் சரியான பதில் எதுவும் கூறாமல் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கொடுத்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ஈரான் புரட்சிகர காவல் படைக்கு தகவல் தெரிவித்தவுடன் விமானி இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் விமானத்தை உடனடியாக தரை இறக்கினார்.

விமானம் தரை இறங்கிய பிறகு அதில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த நபர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். விசாரணையில் அவர் பயணிகள் விமானத்தை கடத்த திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார்.

அதுமட்டுமின்றி அந்த விமானத்தை கடத்திய பின்பு அவர் சவூதி அரேபியா, ஓமன், குவைத்,பஹ்ரைன் போன்ற நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் தரையிறக்குவதற்கு திட்டமிட்டதும் அம்பலமானது.

தற்போது அவரை ஈரான் புரட்சிகர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவர் குறித்து தகவல் எதுவும் வெளியிடவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories