December 6, 2025, 2:13 AM
26 C
Chennai

மே 21: சர்வதேச தேநீர் தினம்!

international tea day
international tea day

இன்று மே 21 சர்வதேச தேநீர் தினம். இந்தியாவில் சற்றேறக்குறைய அனைவருக்குமே காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கம் உண்டு. சோர்வாக இருக்கும்போது உற்சாகத்தை அளிப்பதற்காக டீ குடிப்பது வழக்கம்.

காலை மாலை டீ குடிக்காவிட்டால் நாள் கழிந்தாற்போலவே இருக்காது. சில மேதாவிகள் டீ குடித்தால் தான் தங்களுடைய ஆராய்ச்சிகளைச் செய்ய முடியும் என்ற அளவுக்கு தேநீருக்கு அடிமையாகி உள்ளார்கள்.

இனி கூட்டங்கள் மேடைகள் ஆரம்பமாக வேண்டும் என்றாலும் தேனீர் விருந்து கட்டாயம் இடம்பெறும். பொழுதுபோக்காக இரு நண்பர்கள் சந்தித்தாலும் வீட்டிற்கு யாரேனும் வந்தாலும் அவர்கள் முதலில் கேட்பது டீ குடிக்கிறீர்களா என்பதே.

சாமானிய மனிதன் முதல் செலிபிரிட்டி வரை டீ என்றால் மிகவும் விருப்பப்படுகிறார்கள். தேநீரை விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா?

தேயிலையின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்ட ஐநா சபை மே 21 ம் தேதியை உலக தேனீர் தினமாக அறிவித்தது. இன்றைய தினம் தேநீர் பிரியர்கள் தேநீர் தின நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சைனா நாட்டில் பிறந்த தேயிலை உலகம் முழுவதும் மனிதர்களிடையே உறவுக்கும் உற்சாகத்துக்கும் சின்னமாக மாறிவிட்டது. டீ குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூட தெரிவிக்கிறார்கள்.

தேநீரின் வரலாற்றைப் பார்க்கும்போது… 15ஆம் நூற்றாண்டில் சைனாவில் ஒரு மருத்துவர் தேயிலைகளை பறித்து காயவைத்து ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் சூடான வெந்நீரில் ஊறப்போட்டு அந்த டிகாஷனை மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தினார். டீ டிகாஷன் குடித்ததால் உற்சாகம் ஏற்பட்டதை கண்டறிந்தார்.

17வது நூற்றாண்டில் ஈஸ்ட் இந்திய கம்பனி சைனாவிலிருந்து தேயிலை இறக்குமதி செய்தது. 1823ல் பிரிட்டனைச் சேர்ந்த ப்ரூஸ் சகோதரர்கள் அஸ்ஸாமில் தேயிலை செடிகளை கண்டறிந்து இந்தியாவில் தேயிலை உற்பத்தியை தொடங்கி வைத்தார்கள். தற்போது அசாம் மேற்கு வங்காளம் தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகிறது. திரிபுரா கர்நாடகா மணிப்பூர் சிக்கிம் அருணாச்சல் பிரதேசத்தில் கூட தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன.

இப்போது நாம் குடிக்கும் தேனீர் பல வகையாக உள்ளன. இஞ்சி டீ ஏலக்காய் டீ மசாலா சாய் ஈரானி சாய்… அதோடுகூட ஆரோக்கியத்தை அளிக்கும் கிரீன் டீ லெமன் டீ பிளாக் டீ ஹெர்பல் டீ போன்று பல வகை தேனீர் அருந்தி மகிழ்கிறோம். வாழ்க தேனீர்! தேநீர் பிரியர்கள் அனைவருக்கும் இனிய
தேனீர் தின நல்வாழ்த்துகள்!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories