மே 21: சர்வதேச தேநீர் தினம்!

international tea day
international tea day

இன்று மே 21 சர்வதேச தேநீர் தினம். இந்தியாவில் சற்றேறக்குறைய அனைவருக்குமே காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கம் உண்டு. சோர்வாக இருக்கும்போது உற்சாகத்தை அளிப்பதற்காக டீ குடிப்பது வழக்கம்.

காலை மாலை டீ குடிக்காவிட்டால் நாள் கழிந்தாற்போலவே இருக்காது. சில மேதாவிகள் டீ குடித்தால் தான் தங்களுடைய ஆராய்ச்சிகளைச் செய்ய முடியும் என்ற அளவுக்கு தேநீருக்கு அடிமையாகி உள்ளார்கள்.

இனி கூட்டங்கள் மேடைகள் ஆரம்பமாக வேண்டும் என்றாலும் தேனீர் விருந்து கட்டாயம் இடம்பெறும். பொழுதுபோக்காக இரு நண்பர்கள் சந்தித்தாலும் வீட்டிற்கு யாரேனும் வந்தாலும் அவர்கள் முதலில் கேட்பது டீ குடிக்கிறீர்களா என்பதே.

சாமானிய மனிதன் முதல் செலிபிரிட்டி வரை டீ என்றால் மிகவும் விருப்பப்படுகிறார்கள். தேநீரை விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா?

தேயிலையின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்ட ஐநா சபை மே 21 ம் தேதியை உலக தேனீர் தினமாக அறிவித்தது. இன்றைய தினம் தேநீர் பிரியர்கள் தேநீர் தின நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சைனா நாட்டில் பிறந்த தேயிலை உலகம் முழுவதும் மனிதர்களிடையே உறவுக்கும் உற்சாகத்துக்கும் சின்னமாக மாறிவிட்டது. டீ குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூட தெரிவிக்கிறார்கள்.

தேநீரின் வரலாற்றைப் பார்க்கும்போது… 15ஆம் நூற்றாண்டில் சைனாவில் ஒரு மருத்துவர் தேயிலைகளை பறித்து காயவைத்து ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் சூடான வெந்நீரில் ஊறப்போட்டு அந்த டிகாஷனை மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தினார். டீ டிகாஷன் குடித்ததால் உற்சாகம் ஏற்பட்டதை கண்டறிந்தார்.

17வது நூற்றாண்டில் ஈஸ்ட் இந்திய கம்பனி சைனாவிலிருந்து தேயிலை இறக்குமதி செய்தது. 1823ல் பிரிட்டனைச் சேர்ந்த ப்ரூஸ் சகோதரர்கள் அஸ்ஸாமில் தேயிலை செடிகளை கண்டறிந்து இந்தியாவில் தேயிலை உற்பத்தியை தொடங்கி வைத்தார்கள். தற்போது அசாம் மேற்கு வங்காளம் தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகிறது. திரிபுரா கர்நாடகா மணிப்பூர் சிக்கிம் அருணாச்சல் பிரதேசத்தில் கூட தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன.

இப்போது நாம் குடிக்கும் தேனீர் பல வகையாக உள்ளன. இஞ்சி டீ ஏலக்காய் டீ மசாலா சாய் ஈரானி சாய்… அதோடுகூட ஆரோக்கியத்தை அளிக்கும் கிரீன் டீ லெமன் டீ பிளாக் டீ ஹெர்பல் டீ போன்று பல வகை தேனீர் அருந்தி மகிழ்கிறோம். வாழ்க தேனீர்! தேநீர் பிரியர்கள் அனைவருக்கும் இனிய
தேனீர் தின நல்வாழ்த்துகள்!!

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories