December 6, 2025, 2:15 AM
26 C
Chennai

7 மணிக்கு கடை திறந்த போதே… பழங்களை கீழே கொட்டி அபராதம் விதித்த போலீஸ்!

rajapalayam police station
rajapalayam police station

இராஜபாளையம் பகுதியில் காலை 7 மணிக்கு பழக்கடை திறக்கும் போதே, அபராதம் விதித்து பழங்களை கீழே தள்ளிவிட்டனர் காவல்துறையினர்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு பகுதியில் ராஜேஷ் என்பவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் அரசு உத்தரவிட்டுள்ள காலை ஆறு மணி முதல் பத்து மணிவரை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்

அதே போல் இன்று காலை 7 மணிக்கு டாடா ஏஸ் வாகனம் மூலம் தனது கடைக்கு பழங்களை கொண்டு வந்து இறக்கி வைத்த போது இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் பழக்கடை திறக்க அனுமதி இல்லை எனக் கூறி 200 ரூபாய் அபராதம் விதித்து பழங்களை கீழே தள்ளி விட்டுள்ளனர்.

தமிழக அரசு உத்தரவிட்ட நேரத்தில் கடைகள் திறக்க அனுமதி உள்ள போதும் ஏன் திறக்கக் கூடாது என போலீஸாரிடம் கேள்வி எழுப்பியத்தற்கு காவல்துறையினரிடமே கேள்வி கேட்கிறாயா என்று கடையில் இருந்த பழங்களை கீழே தள்ளி விட்டுள்ளார்கள்.

இதனால் வியாபாரிகள் அனைவரும் காவல்துறையினரின் இந்தச் செயல் கண்டிக்கத் தக்கது; இதுபோல் நடத்துகொண்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; ஆகையால் உரிய நேரத்தில் நாங்கள் கடை திறக்க போலீசார் இடையூறு செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் போவதாக அவர்கள் கூறினர்.

  • செய்தி: வி. காளமேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories