இந்த முககவசம் கொரோனாவை அழிக்குமாம்..! புதிய கண்டுபிடிப்பு!

Published:

mask
mask

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இரண்டு ஆண்டுகளாக பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு இருந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை தற்போது அடியோடி மாற்றியுள்ளது கொரோனா வைரஸ்.
அதனை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை.

எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து(தடுப்பூசி) கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகள் மக்களுக்க செலுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரசை கொல்லும் முககவசம் மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வராமல் பாதுகாக்க நம்மில் பலரும் முககவசம் அணிகிறோம். முககவசம் அணிந்தாலே கொரோனா தொற்று பரவலை பெருமளவில் தடுக்கலாம் என உலகளவில் ஆராய்ச்சி தகவல்கள் சொல்கின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை ஏற்படுத்துகிற சார்ஸ் கோவ்-2 வைரசை கொல்கிற முககவசத்தை மெக்சிகோ சிட்டியில் உள்ள மெக்சிகோ தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது.

இந்த முககவசம் துணியினால் உருவாக்கப்பட்டாலும் அதில் வெள்ளி மற்றும் தாமிர ‘நானோலேயர்’கள் இருக்கும். இவை 30-40 நானோமீட்டர் தடிமன் கொண்டதாக அமைந்திருக்கும்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

இந்த முககவசத்தை 10 முறை வரையில் துவைத்தும் பயன்படுத்த முடியும். தற்போது ஒரு நாளில் 200 முககவசங்களை தயாரிக்க முடிந்தாலும், இவற்றை பெருமளவில் தயாரிக்கிற திட்டம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img