ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்க விட்ட தாலிபான்கள்!

thalipan
thalipan

ஆப்கானிஸ்தான் கந்தஹார் மாகாணத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரில் கீழ் கயிற்றில் தொங்கிய உடலுடன் பறந்த தலிபான்கள்.

ஆப்கானிஸ்தான் கந்தஹார் பகுதியில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் கீழே ஒருவர் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கந்தஹார் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட அமெரிக்க பிளாக் ஹாக் இராணுவ ஹெலிகாப்டரில், தலிபான்கள் ஒருவரைக் கொடூரமாக கொன்று தொங்கவிட்டதாகக் கூறி பல பத்திரிகையாளர்கள் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

கந்தஹார் மாகாணத்திற்கு மேலே தலிபான்கள் பறக்கும்போது அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் தொங்குவதை இந்த வீடியோ காட்சி காட்டுகின்றன.

தரையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ, ஹெலிகாப்டரில் கீழ் கயிறில் தொங்கிய நபர் உயிருடன் இருக்கிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் தலிபான்கள் தாங்கள் கொன்ற ஒரு மனிதனின் உடலை கட்டிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் கந்தஹார் நகரத்தின் மீது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது என்று தலிபானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தலிப் டைம்ஸ் கூறியுள்ளது.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு குறைந்தது 7 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கியதாக டெய்லி மெயில் கூறியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில், அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் கைவிடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

நேற்று ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை அவசரமாக வெளியேறியவுடன், 73 விமானங்கள், 27 ஹம்வீஸ், ஆயுத அமைப்புகள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு உபகரணங்களை முடக்கியதாகக் கூறியது.

காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க படை முழுமையாக வெளியேறிய சில மணி நேரங்களுக்குள், தலிபான்கள் விமான நிலையத்திக்குள் நுழைந்து சினூக் ஹெலிகாப்டர்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்தால் விட்டுச்செல்லப்பட்ட பிற பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்தனர். பத்ரி 313 பட்டாலியன் போராளிகள் ஹெலிகாப்டர்களை ஆய்வு செய்யும் வீடியோவும் வெளியானது.

பின்னர், காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, விமான நிலைய ஓடுபாதையில் தலிபான்கள் கார்கள் மற்றும் பிற வாகனங்களை பந்தயத்தில் ஓடுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளிவந்தன.

மேலும் அமெரிக்கா படை வெளியேறியதை தொடர்ந்து விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை வானவேடிக்கையுடன் கொண்டாடினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories