ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்க விட்ட தாலிபான்கள்!

thalipan
thalipan

ஆப்கானிஸ்தான் கந்தஹார் மாகாணத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரில் கீழ் கயிற்றில் தொங்கிய உடலுடன் பறந்த தலிபான்கள்.

ஆப்கானிஸ்தான் கந்தஹார் பகுதியில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் கீழே ஒருவர் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கந்தஹார் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட அமெரிக்க பிளாக் ஹாக் இராணுவ ஹெலிகாப்டரில், தலிபான்கள் ஒருவரைக் கொடூரமாக கொன்று தொங்கவிட்டதாகக் கூறி பல பத்திரிகையாளர்கள் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

கந்தஹார் மாகாணத்திற்கு மேலே தலிபான்கள் பறக்கும்போது அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் தொங்குவதை இந்த வீடியோ காட்சி காட்டுகின்றன.

தரையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ, ஹெலிகாப்டரில் கீழ் கயிறில் தொங்கிய நபர் உயிருடன் இருக்கிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் தலிபான்கள் தாங்கள் கொன்ற ஒரு மனிதனின் உடலை கட்டிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் கந்தஹார் நகரத்தின் மீது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது என்று தலிபானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தலிப் டைம்ஸ் கூறியுள்ளது.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு குறைந்தது 7 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கியதாக டெய்லி மெயில் கூறியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில், அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் கைவிடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

நேற்று ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை அவசரமாக வெளியேறியவுடன், 73 விமானங்கள், 27 ஹம்வீஸ், ஆயுத அமைப்புகள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு உபகரணங்களை முடக்கியதாகக் கூறியது.

காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க படை முழுமையாக வெளியேறிய சில மணி நேரங்களுக்குள், தலிபான்கள் விமான நிலையத்திக்குள் நுழைந்து சினூக் ஹெலிகாப்டர்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்தால் விட்டுச்செல்லப்பட்ட பிற பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்தனர். பத்ரி 313 பட்டாலியன் போராளிகள் ஹெலிகாப்டர்களை ஆய்வு செய்யும் வீடியோவும் வெளியானது.

பின்னர், காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, விமான நிலைய ஓடுபாதையில் தலிபான்கள் கார்கள் மற்றும் பிற வாகனங்களை பந்தயத்தில் ஓடுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளிவந்தன.

மேலும் அமெரிக்கா படை வெளியேறியதை தொடர்ந்து விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை வானவேடிக்கையுடன் கொண்டாடினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories