April 30, 2025, 10:58 PM
30.5 C
Chennai

டி20: நியூஸ் தந்த நியூசி.,

icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி. டி20 போட்டிகள் – 31.10.2021
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்-

ஞாயிறன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடந்தது. இரண்டாவது ஆட்டம் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே துபாயில் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான்-நமீபியா

பூவாதலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். ஹசரதுல்லா சசாய் (27 பந்துகளில் 33 ரன்), முகம்மத் ஷாஷாத் (33 பந்துகளில் 45 ரன்) அஸ்கர் ஆப்கன் (23 பந்துகளில் 31 ரன்) முகம்மது நபி (17 பந்துகளில் 32 ரன்) சிறப்பாக ஆடினர். எனவே இருபது ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்தது.

பின்னர் ஆட வந்த நமீபிய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. பவர்ப்ளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டுமே அந்த அணியால் சேர்க்க முடிந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிக்கனமாக பந்து வீசினர். ஹமீத் ஹசன் 4 ஓவர் 9 ரன் 3 விக்கட்; ரஷீத் கான் 4 ஓவர், 14 ரன், 1 விக்கட்; குல்புடின் நயீப் 4 ஓவர், ஒரு மெய்டன், 19 ரன், 2 விக்கட்; நவீன் உல் ஹக் 4 ஓவர், 26 ரன் மூன்று விக்கட் எடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி நமீபியா அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா- நியூசிலாந்து

இன்றைய தொல்விக்குப் பின்னர் அரையிறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு குறைவாகவே உள்ளது. இன்றைய ஆட்டத்தில் கட்டாய வெற்றியடைய வேண்டிய ஒரு நிலையில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே இருந்தன.

ALSO READ:  IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

பூவாதலையா வென்ற நியூசிலாந்து இந்தியாவை முதலில் மட்டையாடச் சொன்னது. விநோதமாக ரோஹித் ஷர்மாவிற்குப் பதிலாக இஷான் கிஷனை தொடக்க வீரராக கோலி அனுப்பினார். ஆனால் இஷான் கிஷன் விரைவாக ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராக இறங்கிய ரோஹித் முதல் பந்திலேயே அவுட்டாகியிருக்கவேண்டும். ஆனால் தப்பித்துக்கொண்டார். அவர் எட்டாவது ஓவர் வரை ஆடினார். அவர் சந்தித்த 14 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு ஃபோருடன் அவரால் 14 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிக ரன் எடுத்தது ரவீந்தர் ஜதேஜா (26) மட்டுமே. கிட்டதட்ட தொடர்ச்சியாக 11 ஓவர்களுக்கு இந்திய அணி வீரர்களால் ஒரு ஃபோரோ அல்லது சிக்சரோ அடிக்க முடியவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அவ்வளவு சிறப்பாக பந்து வீசினார்கள். கடைசியில் இருபது ஓவர்களுக்கு ஏழு விக்கட் இழப்பிற்கு இந்திய அணி 110 ரன் எடுத்தது.

இந்த எளிமையான ஸ்கோரை நியூசிலாந்து அணி 14.3 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 111 ரன் எடுத்து எட்டியது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய எந்தத் தூறையிலும் இந்திய அணி சோபிக்கவில்லை. வருண் சக்ரவர்த்தி பந்துவீசும்போது கோலி ரன் சேவிங் ஃபீல்ட் அமைக்கிறார். 110 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் சேவிங் ஃபீல்ட் எதற்கு என்று புரியவில்லை.

ALSO READ:  IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

அநேகமாக இந்திய அணி இந்த சுற்றொடு நாடு திரும்ப வேண்டியதுதான். மிகச்சிறந்த வீரர்கள், சரியான சமயத்தில் சிறப்பாக ஆடவில்லை. நாளை இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையேயான குரூப் 1 பிரிவு பொட்டி நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

Entertainment News

Popular Categories