ஒரு நாளைக்கு 90 ஆயிரம் டிவிட்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ். பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராகிறது

ISIS வாஷிங்டன்: உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு பல வகையிலும் போர்த் தந்திரங்களைக் கையாண்டு அமெரிக்கா பதிலடி கொடுத்து வருகிறது. ஒபாமாவின் நிர்வாகத்துக்கு இது பெரும் தலைவலியாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால், ஆயுத ரீதியான நேரடி போர்த் தந்திரங்களைக் காட்டிலும் இப்போது ஒபாமா நிர்வாகம் பெரும் சிக்கலில் திளைப்பது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்களின் தீவிர பிரசாரம்தான். இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வலைத்தளங்கள் மூலம் தீவிர பிரசாரத்தை உலகம் முழுவதும் மேற்கொள்கின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவர்களின் செயல்பாடுகள் அதி தீவிரமாக உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் டிவிட்கள் அவர்களால் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த அளவுக்கு மிக அதிக டிவிட்களையும், அவர்களின் நடவடிக்கைகளையும் தனித்தனியாக கண்காணித்து அவர்களின் செயல்பாடுகளை ஆராய்வது மிக கடினமான பணி என்கின்றனர் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பினர். ஈராக்கில் அதிக தீவிரத்துடன் செயல்படும் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பினர், சிரியாவில் தங்கள் கைகளை ஓரளவு விரிவாக்கியுள்ளனர். இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளின் பிரசாரங்களையும் நடவடிக்கைகளையும் சமூக தளங்கள், மற்றும் இணைய வெளியில் கண்காணிக்க செண்டர் ஃபார் ஸ்ட்ராடெஜிக் கவுண்டர் டெரரிசம் கம்யூனிகேஷன் என்ற ஒரு நிறுவனத்தை அமெரிக்க அமைப்பு நிறுவத் தீர்மானித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லது ஐ.எஸ்.ஐ.எல். என்ற பெயர்களில் இயங்கி வருவதும், அவர்களின் இலக்கு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என்பதும், அமெரிக்க அரசால் கூட நெருங்கி நம்பிக்கை ஏற்படுத்த முடியாத இத்தகையவர்களிடம் தனது பிரசாரம் மூலம் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் நெருங்குவதும் இப்போது இந்த அமைப்பால் பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories