அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போருக்கு எந்நேரத்திலும் தயாராக இருங்கள் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவுடன் பகை பாராட்டி, அதன் எதிரி நாடாகத் திகழும் தென்கொரியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது. தென்கொரியாவுக்கு ராணுவ ரீதியான உதவிகளைச் செய்வதுடன், அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் தென்கொரியப் பகுதியிலும் தங்கியுள்ளனர். தென் கொரியாவைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து, வரும் 3-ம் தேதி அமெரிக்க வீரர்கள் 8 வார கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் போர் நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தை அவர் திறந்து வைத்தார். அதன்பின்னர் கிம் ஜாங்-உன், ராணுவ வீரர்களிடையே வீர உரை நிகழ்த்தினார். அப்போது அவர்… “நாட்டை மீண்டும் (தென் கொரியா-வட கொரியா) ஒன்றிணைக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வரும் இந்த நேரத்தில் ஒட்டுமொத்த ராணுவமும் சித்தாந்தப்படியும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும். கடின பயிற்சியில் ஈடுபட்டு ‘பட்டை மற்றும் நட்சத்திரத்தை’ (அமெரிக்க கொடியில் உள்ள சின்னங்கள்) துண்டுதுண்டாகக் கிழித்தெறிய வேண்டும்”. – என்றார்.
அமெரிக்காவுடன் போர்?: ராணுவத்தினர் தயாராக இருக்குமாறு வட கொரிய அதிபர் உத்தரவு
Popular Categories


