குஜராத்தைப் போல் நாடு முழுவதும் பூரண மது விலக்கு தேவை: குமரி அனந்தன்

Published:

  சென்னை: குஜராத்தில் உள்ளதைப் போன்று நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்தார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் -ஏவிபிவி சார்பில், “மதுவில்லா தமிழகம்’ உருவாக வேண்டி, மாணவர்களின் மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குமரி அனந்தன் பேசியபோது, இப்போதைய புள்ளி விவரப்படி, 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 40 சதவீதம் பேர் குடிப்பதாவும், பெண்களில் 13 சதவீதம் பேர் குடிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களிலும், ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆட்சி காலங்களிலும் தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லை. அதற்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்கள் மதுவிலக்கை விலக்கி, மதுவைக் கொண்டுவந்தனர். மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மது விற்பனை என்பது தற்போது மாநிலத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டதாக இருக்கிறது. தற்போது அவர் நாட்டின் பிரதமராக இருக்கிறார். எனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மதுவைக் கொண்டுவர மசோதா நிறைவேற்ற வேண்டும். பின்னர் நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்த மோடி தீர்மானம் கொண்டுவர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img