கரூர்: ஒரு சமுதாயத்தைக் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் குறிப்பிட்டு, அவதூறாக புத்தகம் எழுதிய எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வெள்ளப்பாறையை அடுத்துள்ள ஆணைப்பட்டியைச் சேர்ந்தவர் புலியூர் முருகேசன். இவர் தற்போது கரூர் அருகேயுள்ள புலியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எல்ஐசி ஏஜெண்டான இவர் எழுத்தாளராகவும் உள்ளார். இவர் “பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ என்ற சிறுகதைத் தொகுப்பை கடந்த 28.12.2014-ல் கரூரில் வெளியிட்டார். இதில் உள்ள நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன் என்ற தலைப்பிலான சிறுகதையில் ஒரு திருநங்கையின் வாழ்க்கையை குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மையமாக வைத்து எழுதியுள்ளார். அதில் தங்கள் சமுதாயம் குறித்து தவறாகச் சித்திரித்துள்ளதாகவும், அந்த நூலைத் தடை செய்ய வேண்டும், முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அந்தச் சமுதாயத்தினர் கடந்த வியாழக்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்நிலையில் முருகேசன்மீது நூல் ஆபாசமாக இருத்தல் (292), புத்தகத்தில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துதல் (153), எழுத்துகள் கலவரத்தை உருவாக்குதல் (504, 505) உள்ளிட்ட 5 பிரிவுகளில் பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

