December 5, 2025, 2:42 PM
26.9 C
Chennai

இந்திய இணையதளங்கள் பெயரில் தகவல்களைத் திருடும் சீனா!

china websites - 2025

இந்திய இணையதளங்களை பதிவு செய்து அவற்றின் மூலம் ஊடுருவும் சீனர்கள்,  இப்போது இந்தியர்களின் தகவல்களை திருடுவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. 

சீன செயலிகள் மூலம் இப்படி வாடிக்கையாளர் விவரங்கள் சேகரிப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பல செயலிகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டன.. அந்த செயலிகளின் சர்வர் சீனாவில் இருப்பதும், சீன அரசின் கொள்கைப்படி தாங்கள் கேட்கும் நேரத்தில் வாடிக்கையாளரின் அனைத்துத் தரவுகளையும் பார்க்கும் உரிமை அரசுக்கு உண்டு என்றும் இருப்பதால், மத்திய அரசு அவற்றை அப்போது  தடைசெய்தது.

சீன இணையதளங்கள், செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த வருடம் தடை விதித்தது. இதனால்  சீனாவைச் சேர்ந்த, ‘சைபர்’ மோசடி பேர்வழிகள், ‘டாட் இன்’ என்ற இந்திய இணையதளங்களை வாங்கி, அதன் வாயிலாக நம் தகவல்களை திருடும் விஷயம் அம்பலமாகி உள்ளது. 

சீனாவைச் சேர்ந்த இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதை அடுத்து அவற்றுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தகவல் திருட்டு வாயிலாக பல்வேறு பொருளாதார மோசடிகளும் அரங்கேறின. இதையடுத்து, சீன இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் தொடர் கண்காணிப்புகளுக்கு பிறகே அனுமதி அளிக்கப்படுகின்றன. இந்த நடைமுறையால் அதிக கால தாமதமாவதை தடுக்க சீனாவைச் சேர்ந்த சைபர் மோசடி பேர்வழிகள் குறுக்கு வழியில் ஊடுருவி வருகின்றனர்.

தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு, கடந்த மே மாதம் தங்கள் வழக்கமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்ட போது, சந்தேகத்துக்குரிய சில சீன சைபர் மோசடி நிறுவனங்கள் நான்கு நாட்களில் 2,000 இணையதளங்களை நம் நாட்டில் பதிவு செய்தது தெரியவந்தது.

இந்தியாவில் பதிவு பெறும் இணைய தளங்கள் ‘டாட் இன்’ என்ற அடையாளத்தைக் கொண்டுள்ளன. இந்த டாட் இன் இணையதளங்களைப் பதிவு செய்வதன் வாயிலாக, தங்களை இந்திய நிறுவனங்களைப் போல அவர்கள் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இவை பெரும்பாலும் போர்னோகிராபி எனப்படும் பாலியல் இச்சைகளை துாண்டும் இணையதளங்கள் மற்றும் சூதாட்டத் தளங்களாக இந்தியாவில் செயல்பட்டு, இந்தியர்களின் பணத்தைச் சுருட்டும் தளங்களாக மாறியுள்ளன.  

இந்த இணையதளங்களை கணினிகளிலோ, மொபைல் போன் செயலி வாயிலாகவோ பயன்படுத்தும் போது, பயனாளரின் தனிப்பட்ட தகவல்களை அந்நிறுவனம் திருடுகிறது. அதன் வாயிலாக, பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட முறைகேடுகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., மொபைல் போன்களில் இந்த திருட்டுகள்  நடந்துள்ளன.  இதையடுத்து, வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், நம் இணையதளங்களை சட்டவிரோதமாக வாங்குவதை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories