
—“ஜெய் ஹிந்த்” ஸ்ரீராம்
ஐ லவ் பாரிஸ் என்பது தான் அழகுணர்ச்சி கொண்ட அனைவரது வாக்கியம். ஆனால் இன்று அப்படி அல்ல. அதற்கு காரணம் கடந்த மாதம் 27 தேதி நடந்த சம்பவம்.
இஸ்லாமிய இளைஞன் ஒருவனை பிரெஞ்சு போலீசார் சுட்டுக் கொன்றதால் கலவரம் காட்டுத் தீ போல பரவி பலரது வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது! மற்ற நாடுகளின் கேலிக்கும் உள்ளாகி இருக்கிறது. பிரான்ஸின் தலைநகர் பாரீஸ்! என்ன நடக்கிறது அங்கே? யார் காரணம்? அல்லது எது காரணம்?
இது அவசியமா என்றால்…?! நம் இந்திய தேசம் எப்படி அந்நாளில் அடிமை தேசமாக மாறியது என்பதனை அறிந்திட இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு புரிந்து கொள்ள இது உதவும்.
பொதுவாக பிரான்ஸ் இன்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தீண்டத்தகாத தேசமாகப் பார்க்கும் அளவிற்கு மாறி நிற்கிறது. அதற்குக் காரணம் அகதிகள்.
அதனை இப்படியும் பார்க்கலாம். வந்தாரை வாழ்வித்த பூமி, கலங்கி நின்று கடல் கடந்து வந்தவர்களை வாரி அணைத்து அரவணைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே இடம் பிரான்ஸ் மட்டுமே! இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு! இன்றைய நிலைமையோ உலகம் அறிந்த ஒன்று!
பூகோள ரீதியாக பிரான்ஸுக்கு நேர் தெற்கில் வட ஆப்பிரிக்கா தேசங்களில் வாழும் மக்களின் கண்களுக்கு இவர்கள் சுக போகங்களில் திளைக்கும் மக்களாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இவர்களின் படாடோபமான வாழ்க்கை முறை, கடின உழைப்பாளிகளான அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது என கருதுகிறார்கள் உலக அரசியல் நிபுணர்கள்!
போதாக்குறைக்கு, இரண்டாயிரமாவது ஆண்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்வும் ஓர் காரணியாக பார்க்கப்படுகிறது. டாலருக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொண்டு வந்த யுரோ கரன்சியும், அதை தொடர்ந்து வந்து பிரிக்ஸ் கூட்டமைப்பும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மிகப் பெரிய அளவிலான இன்றைய ஸ்திரத்தன்மையின்மைக்கு மிக முக்கியமான காரணம் என்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பொதுவான கரன்சி, பொதுவான விசா நடைமுறை என இவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமாச்சாரங்களுக்கு அந்நாளில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது! ஆனால் அதனையே பயன்படுத்தி மற்ற இடங்களில் உள்ளவர்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளே நுழைந்து விட்டதுதான் பெரிய தலைவலியாகிப் போனது.
சூடானிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், இலங்கை மக்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அதிக அளவில் இடம் பெயர்ந்தது இந்த நேரத்தில் தான்! இங்கிலாந்து முழுவதும் உள்ள சர்ச்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இஸ்லாமியர்களின் வசம் ஆனபோது தான் இங்கிலாந்து விழித்துக் கொண்டு விழி பிதுங்கி நின்றது. முதல் காரியமாக பிரிக்ஸ்-ஐ விட்டு வெளியேற அங்கு உள்ள மக்கள் போராட்டம் எல்லாம் நடத்தி பிய்த்துக் கொண்டு ஓடினார்கள்.
மழை விட்டாலும் தூவானம் விடாத குறையாக இன்னமும் அங்கு பிரச்னை நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டுதான் இருக்கிறது. இங்கிலாந்து பொருளாதாரம் இஸ்லாமிய சமூகத்தின் கைகளில் சிக்குண்டு கிடக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்!
அதன் அடுத்த தேசமாக உள்ள பிரான்ஸின் நிலைமை தான் கவலைக்கிடமாக உள்ளது. பிரான்ஸின் சேவை சார்ந்த வேலைகளில் அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சமூகத்தைச் சேர்ந்த இன்றைய இளம் தலைமுறையினர் தான் பிரான்ஸுக்கு பெரும் தலைவலியாக மாறி நிற்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வுக் கட்டுரை.
இவர்களுக்கு கொள்கை கோட்பாடுகள் இல்லை. மதத்தின் மீது பெரிய அபிமானம் இல்லை. இருப்பினும் இவர்களுக்கு மற்றவர்கள் தங்களை விலக்கி வைத்து இருப்பதாக, சம அந்தஸ்து கொடுக்காமல் கொடுமைப் படுத்துவதாக உளவியல் பூர்வமாக நம்புகிறார்கள். இவர்களைப் பிடித்து மூளைச் சலவை செய்ய ஒரு கூட்டமே காத்துக் கொண்டு இருக்கிறது. பகட்டும் படடோபமும் இவர்களைப் பிடிக்க பகடை காய் ஆகிறது.
விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் கார்தான் இதற்கான தூண்டில். அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான் இவர்களின் இலக்கு. அவர்களின் நோக்கம் அதாவது இதனை முன்னெடுப்பவர்களின் நோக்கம்- போதை வஸ்துக்களை பிரான்ஸ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அதன் மூலம் அதிகப்படியான யூரோக்களை வாரிக் குவிப்பதும் தான் அவர்களின் பிரதான எதிர்பார்ப்பு.
சிக்கும் விட்டில் பூச்சிகளை இதற்கு தயார் படுத்துகிறார்கள். அவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளைச் செய்கிறார்கள். யாரோ எங்கோ உட்கார்ந்து கொண்டு நீ அடிமைத்தளைகளை உடைத்தெறிய செல்வச் செழிப்புடன் விளங்கும் பிரெஞ்சு மக்களை உன் இலக்காகக் கொள் என விடாமல் பிரசாரம் செய்ய, இவர்களும் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல ஆட்டம் ஆடத் தொடங்குகிறார்கள்.
கடந்த மாதம் 27ம் தேதியன்று அது போலான ஒரு சம்பவம் தான் நடந்தது என்கிறார்கள்!
பிரெஞ்சு போலீசார் வழக்கமான சோதனைகளில் ஈடுபட்டு வந்த சமயத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் நிற்காமல் அதி வேகத்தில் அவர்களைக் கடக்க முற்பட, பயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்கிறார்கள். நிற்காமல் போனால் சுடுவார்களா என விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு… இதே போன்ற நிகழ்வு ஒன்று 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 தேதியன்று நடந்ததை அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு டிரக் டிரைவர் நிறுத்தச் சொல்லியும் கேட்காமல் ஜன சந்தடி நிறைந்த இடத்தில் அதி வேகமாக தனது வாகனத்தை இயக்கி 86 பேரைக் கொன்று கிட்டத்தட்ட 437 வரை பேர் வரை காயம் ஏற்படுத்திய அந்த நிகழ்வை நினைவு படுத்திக் கொண்டு பாருங்கள் என்கிறார்கள்!
இந்த நிகழ்வுக்குப் பின்னர் பிரெஞ்சு போலீசாருக்கு அழுத்தம் அதிகம்தான்! சம்பவ தினத்தன்று 17 வயது நஹல் மசூக் எனும் டெலிவரி வேலை பார்க்கும் நபரை நிறுத்தச் சொல்லியும் கேட்காமல் அதிவேகத்தில் தனது காரை இயக்க, போலீசார் வேறு வழியின்றி சுட வேண்டியிற்று. அந்தப் பையன் தரப்பில் விசாரணையின்போது தான் ஏற்கெனவே இதே போன்ற ஒரு சம்பவம் நடந்து, லைசென்ஸ் உரிமம் இல்லை என்பதால் எச்சரித்து அனுப்பி வைத்தது தெரிய வந்திருக்கிறது. பிரான்ஸில் ஓட்டுநர் உரிமம் பெற நம்மூர் போல பதினெட்டு வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்கிறது அங்கு உள்ள சட்டம்.
சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான தண்டனை உண்டு அங்கு! அதனாலேயே பயத்தில் வாகனத்தை நிறுத்தாமல் மசூக் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நஹல் மசூக் குடும்பத்தினர் அல்ஜீரியாவை சேர்ந்தவர்கள். அகதிகளாக அல்லது தொழிலாளர் விசாவில் பிரான்ஸில் குடியேறியவர்கள். அப்படி என்றால் மசூக் ஒட்டி வந்த விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்?
அவனுடையது தான் என்கிறார்கள். ஏது இது அவனுக்கு? யார் கொடுத்தது? எதற்காக, அல்லது என்ன வேலைக்காக? எனக் கேட்க தெரியாது என்கிறார்கள் அந்தக் குடும்பத்தினரே. அவனிடம் தாங்கள் கேட்டதற்கும் பதிலே சொல்லவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள் விசாரணையின் போது. அதேசமயம் தங்கள் குடும்பத்தினரை மசூக் அளவு கடந்து நேசித்திருக்கிறான். ஒழுக்கம் நிறைந்தவன் என்கிறார்கள்.
அவன் குணம் அறிந்த அவன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் பொங்கி எழுந்து கலவரத்தில் ஈடுபட்டனர் என்று நினைத்தால் அதுவும் தவறு. இத்தனைக்கும் இந்தக் கலவரம் நடந்த சமயத்திலும் சரி அதற்குப் பின்னரும் சரி, மசூக் குடும்பத்தினர்தான் பெருமளவில் கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக போலீசார் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாம், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் வைத்த வண்ணம் இருக்கிறார்கள்.
சரி நடந்த கலவரத்திற்கு யார் காரணம்?
ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைக் கை காட்டுகிறார்கள். இதே போன்று தான் சில பல மாதங்களுக்கு முன்பு நபிகள் நாயகத்தின் கார்டூனை கல்லூரியில் வைத்துப் பேசியதாகச் சொல்லி ஒரு பேராசிரியரைக் கொடூரமாகக் கொன்றது நினைவிருக்கலாம். அந்தச் சம்பவத்திலும் இதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அதாவது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர்தான் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது! ஆனாலும் பெரிய அளவில் நடவடிக்கைகள் இல்லை. எடுக்கவும் முடியவில்லை!
மாக்ரோன் தலையைப் பிய்த்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக ஓடிக் கொண்டு இருக்கிறார், அங்குள்ளவர்களை சமாதானப் படுத்த! ஆனாலும் காரியங்கள் கை மீறிச் சென்று கொண்டு இருக்கிறது! உதாரணமாக இந்தக் கலவர சமயத்தில் ஒரு ஆப்பிள் ஸ்டோரை முற்றுகை இட்டு முற்று முழுதாகக் கொள்ளையடித்து விட்டு சென்று இருக்கிறது ஒரு கும்பல்! அவர்களில் பலரும் இஸ்லாமியரும் இல்லை, அதேபோல் பிரெஞ்சு பிரஜைகளைப் போலவும் இல்லை என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார்கள்.
பதாகைகள் பிடித்து ஊர்வலம் வந்த பலரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் அவர்களின் நோக்கமோ வேறுவிதமாக இருக்கிறது. கிட்டத்தட்ட பிரான்ஸ் முழுவதும் சுமார் 8% மக்கள் தொகையில் இருக்கும் தங்களுக்கு சரியான மதிப்பு இல்லை என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. அதேசமயம் வேறோர் புள்ளி விவரம் 19% விழுக்காடு விகிதத்தில் பிரான்ஸில் இஸ்லாமிய சமூகம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று பயமுறுத்துகிறார்கள்.
நம் இந்திய தேசத்தில் 8.5%த்தில் இருந்து 13% வரையிலும் கடந்த பத்து ஆண்டுகளில் 17% அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது இஸ்லாமிய சமூகம். (நன்கு கவனியுங்கள் இவை பொதுவான இந்திய மக்கள் தொகை பற்றிய தகவல்கள் அல்ல) இத்தனைக்கும் இவர்கள் அனைவரும் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களா என்றால் அது தான் இல்லை. அவர்கள் அப்படி இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களின் (இஸ்லாமியர்) வளர்ச்சி விகிதம் 3.2% மட்டுமே என அதிர்ச்சி தரும் ஆய்வுகள் எல்லாம் நம்மிடமும் உண்டு என்பதை இந்த தருணத்தில் மறவாதீர்கள். அப்படி என்றால்?
பிரான்ஸில் நடைபெறும் விஷயம் உலகிற்கு ஒரு பாடம்! நமக்கும் இது குறித்தான ஒரு பொது பார்வை வேண்டும். அது காலத்தின் கட்டாயமும் கூட. காலங்காலமாக இங்கேயே வாழ்ந்து வருபவர்களை விட புதியதாக உள்ளே வந்தவர்களிடம் தான் அத்தனை அரசு ஆவணங்கள் ஆகச் சரியாக இருக்கின்றன என்பதை இந்த தருணத்தில் உணர வேண்டும். இவர்கள் நமக்கு வரமா சாபமா? தெரியாது. ஆனால் இருக்கின்ற இந்த தேசம் நமக்கு சொர்க்கமானது. நமக்கு இருக்கும் ஒரே சொந்தமும் கூட. மற்றவர்களுக்கு அப்படி அல்ல. அதுதான் இதிலுள்ள வித்தியாசம். வேறென்ன சொல்ல இருக்கிறது?