உளவு பார்க்கும் செயற்கைக்கோள் ஒன்றை புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது ஜப்பான். மின்னல் அச்சம் காரணமாக முன்னர் இவ்வாறான முயற்சி கைவிடப்பட்டிருந்தது. ஜப்பான் தனது அண்டை நாடான வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய ஏவுகணையை தன் பெருநிலப் பரப்புக்கு மேலாக செலுத்தியது முதல், இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டிருந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து உளவு பார்க்கும் செயற்கைகோள்களை ஜப்பான் அனுப்பி வருகின்றது. தெற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி நிலையத்திலிருந்து இந்தப் புதிய செயற்கைக்கோள் ஞாயிற்றுகிழமை இன்று ஏவப்பட்டது.

