அயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு

04 May27 irland - 2026அயர்லாந்து குடியரசில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4 சதவீத வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 33.6 சதவீத வாக்குகளும் பெறப்பட்டுள்ளன.

தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும்.

முன்னதாக கருக்கலைப்பு தடைச் சட்டதில் மாற்றம் கொண்டுவருவதற்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் தனது நாட்டின் “அமைதியான புரட்சி” இது என்று பாராட்டியுள்ளார்.

கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் பெறப்பட்டுள்ளன என்று கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்தவுடன் அவர் இதனை தெரிவித்தார்.

தாராளமயமாக்கலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அயர்லாந்து பிரதமர், கடந்த 20 வருடங்களாக அயர்லாந்தில் நடைபெற்று வந்த அமைதி புரட்சியின் உச்சக்கட்டத்தைதான் நாம் பார்க்கிறோம் என தெரிவித்தார்.

தங்களது சுகாதாரம் குறித்து பெண்கள் தங்களது முடிவுகளையும், தகுந்த வாய்ப்புகளையும் தேர்ந்தெடுப்பார்கள் என அயர்லாந்து வாக்காளர்கள் நம்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கருவில் உள்ள குழந்தைக்கும், கருவை சுமக்கும் பெண்களுக்கு உள்ளது போன்றே வாழ்வுரிமை உண்டு என்பதை கூறும் எட்டாவது சட்ட வரைவை நீக்க வேண்டுமா அல்லது தக்க வைக்க வேண்டுமா என மக்கள் தங்களது வாக்குகளை அளித்தனர்.

தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். பாலியல் வன்புணர்வு, ஆபத்தான கருச்சிதைவு ஆகிய சூழல்களில் கருக்கலைப்பு செய்ய இயலாது.

இந்த வருடத்தின் இறுதியில் புதிய கருக்கலைப்பு சட்டம் இயற்றப்படும் என வரத்கர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories