18 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை வரைபடத்தை இலங்கையின் நிலா மற்றும் நிலா மேம்பாட்டு துறையின் கீழ் இயக்கும் இலங்கை சர்வே துறை புவியியல் வரைபடத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட புவியியல் வரைபடத்தில், கூடுதலாக கொழும்பு துறைமுக நகரத்தை இணைத்து, இரண்டு சதுர கிலோ மீட்டர் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த புவியியல் வரைபடம் குறித்து பேசிய பொது சர்வே துறை உயர் அதிகாரி உதயகந்தா, தற்போது உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வடிவிலான புவியியல் வரைபடத்தில் கொழும்பும் நகரம் இணைக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள புவியியல் மாற்றங்களை உள்ள்டகியுள்ள இந்த புவியியல் வரைபடம், 1:500 என்ற விகித்தில், மொரகஹகண்ட அணைக்கட்டு மற்றும் பிளவர் புதிய திட்டங்களும் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புவியியல் வரைபடத்தின் பிரிண்ட்கள் வரும் ஜூன் மாத்தில் வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.



