விமானம் வெடிக்கும் எனக் கூறிய பயணியால் பரபரப்பு: ஏர் அரேபியா அவசரத் தரையிறக்கம்

Published:

Air-Arabia-Aircraftதுபை: விமானம் வெடிக்கப் போகிறது என்று பயணி ஒருவர் கூறியதால், விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த ஏர் அரேபியா நிறுவன விமானம் குவைத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏர் அரேபியா நிறுவனத்தின் ஜீ-9128 விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், திடீரென விமானம் வெடிக்கப் போவதாகக் கத்தினார். இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்காவின் மத்தியக் கிழக்குப்பகுதியில் அமைந்த அல் மிஹாத் ராணுவத் தளத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவித்த அல் மிஹாத் விமான நிலையத்தின் உயர் அதிகாரிகள் “விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, உயர் அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறியுள்ளனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img