இஸ்லாமாபாத்: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசியபோது, பேரிடர் மேலாண்மை, விளையாட்டு, கப்பல் போக்குவரத்து, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதன் பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, இலங்கை, பாகிஸ்தான் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவை மேம்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று சிறீசேன கூறினார்.
பாகிஸ்தான் – இலங்கை இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari