மாலத்தீவு தேர்தல் : தோல்வியை ஒப்புக் கொண்ட அதிபர் அப்துல்லா யேமன்!

Published:

maldives opponent winner horz - 2026

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

மாலத்தீவு அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவருமான இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளார். சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார்.

மாலத்தீவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் அப்துல்லா யாமீனுக்கும், மாலத்தீவு ஜனநாயகக் கட்சி தலைமையில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் சார்பில் நிறுத்திய வேட்பாளர் இப்ராகிம் முகமது சொலிஹ்ஹுக்கும் கடும் போட்டி நிலவியது.

தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், எதிர்க் கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலிஹ், 58 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

முன்னதாக, தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் வெற்றி பெறுவார் என்று கூறப் பட்டது. அவருக்கு சாதகமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

ALSO READ:  FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அப்துல்லா யாமீனால், மாலத் தீவில் கடும் அரசியல் குழப்பங்களும், நெருக்கடிகளும் நிலவின. அடக்குமுறைகளை அதிபர் கட்டவிழ்த்து விட்டார் என்று மக்கள் கருதினர். இதனிடையே, தேர்தல் முடிவுக்கு மதிப்பளித்து சுமுகமான அதிகார மாற்றத்தை அப்துல்லா யாமீன் உறுதிப்படுத்த வேண்டும் என்று வெற்றி பெற்றுள்ள இப்ராகிம் முகமது கேட்டுக்கொண்டார்.

மாலத்தீவு அதிபர் தேர்தல் முடிவு ஜனநாயக சக்திகளுக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ள இந்தியா, வெற்றிபெற்ற வேட்பாளர் இப்ராகிம் முகமதுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img