மாலத்தீவு தேர்தல் : தோல்வியை ஒப்புக் கொண்ட அதிபர் அப்துல்லா யேமன்!

maldives opponent winner horz - 2026

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

மாலத்தீவு அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவருமான இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளார். சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார்.

மாலத்தீவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் அப்துல்லா யாமீனுக்கும், மாலத்தீவு ஜனநாயகக் கட்சி தலைமையில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் சார்பில் நிறுத்திய வேட்பாளர் இப்ராகிம் முகமது சொலிஹ்ஹுக்கும் கடும் போட்டி நிலவியது.

தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், எதிர்க் கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலிஹ், 58 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

முன்னதாக, தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் வெற்றி பெறுவார் என்று கூறப் பட்டது. அவருக்கு சாதகமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அப்துல்லா யாமீனால், மாலத் தீவில் கடும் அரசியல் குழப்பங்களும், நெருக்கடிகளும் நிலவின. அடக்குமுறைகளை அதிபர் கட்டவிழ்த்து விட்டார் என்று மக்கள் கருதினர். இதனிடையே, தேர்தல் முடிவுக்கு மதிப்பளித்து சுமுகமான அதிகார மாற்றத்தை அப்துல்லா யாமீன் உறுதிப்படுத்த வேண்டும் என்று வெற்றி பெற்றுள்ள இப்ராகிம் முகமது கேட்டுக்கொண்டார்.

மாலத்தீவு அதிபர் தேர்தல் முடிவு ஜனநாயக சக்திகளுக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ள இந்தியா, வெற்றிபெற்ற வேட்பாளர் இப்ராகிம் முகமதுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories