ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்தார் ராஜபட்ச! உடன் 50 முன்னாள் எம்.பி.க்களும் அடைக்கலம்! சிறீசேனவுக்கு பின்னடைவு!

Mahinda Rajapakse - 2026

இலங்கையில் அரசியல் குழப்பம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. சுதந்திர கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார் ராஜபட்ச. இதனால் அதிபர் சிறீசேனவுக்கு பின்னடைவு என்று கருதப் படுகிறது. மீண்டும் அதிபர் பதவிக்கு வரும் ராஜபட்சவின் நடவடிக்கைக்கு தன்னையே பலியாக்கியுள்ளார் சிறீசேன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!

கடந்த மாதம் திடீரென்று இலங்கை அதிபர் சிறீசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபட்ச, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார். இது சிறீசேனவுக்கு பெரும் பின்னடைவு என்கிறார்கள்.

இலங்கையில் அரசியல் குழப்பம் உச்ச கட்டத்தை அடைந்தது. இதனால், தாம் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க, அதிபர் சிறீசேன, நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வரும் ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது.

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

இலங்கை முன்னாள் அதிபரும், இந்நாள் அதிபர் சிறீசேனவால் பிரதமராக தற்போது அறிவிக்கப் பட்டவருமான மகிந்த ராஜபட்ச, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் முன்னர் தலைவராக இருந்தவர். தற்போது அக்கட்சியின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்து வந்தார். தற்போது, அதிபர் சிறிசேன அக்கட்சிக்கு தலைவராக உள்ளார்.

இந்நிலையில் மகிந்த ராஜபட்ச, சுதந்திர கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார். அவருடன் சுதந்திர கட்சியில் அங்கம் வகித்த 50 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற ராஜபட்சவின் கருத்துக்கு சிறீசேன செவி சாய்க்காததால் 50 ஆண்டுகளாக இருந்த கட்சியில் இருந்து அவர் வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது.

வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலில் ராஜபட்ச போட்டியிடுவதற்கான முதல்படி இது என்கிறார்கள். ராஜபட்சவின் ஆதரவாளர்கள் மீண்டும் அரசியலில் கோலோச்சுவதற்காக, கடந்த ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சி தொடங்கப்பட்டது. ஜி.எல்.பெரிஸ் தொடங்கிய இந்தக் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் 340 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்றது. இதை அடுத்தே இலங்கையில் அரசியல் மாற்றங்கள் மெள்ள மெள்ள ஏற்பட்டன. ராஜபட்ச இதில் இணைந்துள்ள நிலையில், பொதுஜன முன்னணியின் தலைவராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தற்போது ராஜபட்ச எடுத்துள்ள முடிவு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேனவுக்கும் பெரும் பின்னடைவு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories