தன் நாட்டைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமையும் உண்டு: ஆதரவளிக்கும் இஸ்ரேல்!

Published:

ron malka isrel ambassodor for india - 2026

தனது நாட்டைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கவும் இந்தியாவுக்கு முழு உரிமையும் உண்டு! பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்கத் தயாராக உள்ளோம்’ என்று கூறியுள்ளது இஸ்ரேல்!.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சர்வதேச சமூகம் கருத்து வெளியிட்டு வருகின்றது.

இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடான இஸ்ரேல், தன் நாட்டைக் காப்பதற்கு எடுக்கும் அதிரடி நடவடிகைகளைப் போல், இந்தியாவும் எடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இஸ்ரோல் தனது ஆதரவுக் கருத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதரும் அந்நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரியுமான ரோன் மால்கா இது குறித்துக் கூறியபோது….

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

பயங்கரவாதத்துக்கு எதிராக துல்லியமாகவும், விரைவாகவும் இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகள் உலகம் பாராட்டுகிறது. பயங்கரவாதம் இந்தியா, இஸ்ரேல் பிரச்னை அல்ல; உலகளாவிய பிரச்னை! இதில் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். தன் நாட்டைப் பாதுகாக்கவும் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கும். முழு ஒத்துழைப்பும் அளிக்கும் என்றார்.

Related articles

Recent articles

spot_img