இந்தியாவின் உடனடி உதவி: நேபாளத் தூதர் உருக்கம்

deep-upadayayaநேபாளத்தில் இன்று முற்பகல் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து, தொடர்ந்து 4 முறை நிலம் அதிர்ந்தது. இதனால் நேபாளத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. கட்டடங்கள் பல இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு சுமார் 100 பேர்வரை பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், நேபாளத்துக்கு தனது உடனடி உதவிக் கரத்தை இந்தியா நீட்டியுள்ளது பிரதமர் மோடி, உடனடியாகத் தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை செய்வதாக்க் கூறி செயலில் இறங்கினார். இதனிடையே, தாங்கள் இந்தியாவுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும், இந்தியாவின் உடனடி உதவிக்கு நன்றி கூறுவதாகவும் இந்தியாவுக்கான நேபாள தூதர் தீப் உபாத்யாய கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் துடிப்பான செயல்பாடுகள் நேபாளத்துக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாகக் கூறினார். அவர் மேலும், நேபாளத்துக்கு மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவ அவசர சிகிச்சை அமைப்புகள் தேவைப்படுகின்றன என்றும், அவற்றை உடனே அனுப்பி வைக்க உதவுமாறும் இந்தியாவைக் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Entertainment News

Popular Categories