நியூயார்க்: அமெரிக்காவின் அடையாளமாகத் திகழும் சுதந்திரதேவி சிலைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். நியூயார்க்கின் லிபர்டி தீவில் பிரசித்தி பெற்ற சுதந்திரதேவி சிலை உள்ளது. இந்தச் சிலையை பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இங்கே வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சிலையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக திடீரென மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சுதந்திரதேவி சிலையில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாகவும், சற்று நேரத்தில் அது வெடித்துச் சிதறும் என்றும் கூறியுள்ளார். இதனால் அங்கே பீதி ஏற்பட்டது. மிரட்டல் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மோப்ப நாய்களுடனும், வெடிகுண்டு நிபுணர்களுடனும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், அங்கே தீவிர சோதனை நடத்தப்பட்டும், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதனால் இது வெறும் புரளி என்று தெரியவந்தது.
சுதந்திர தேவி சிலையை தகர்ப்போம்: மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்
Popular Categories


