February 22, 2026, 2:57 AM
25.6 C
Chennai

அமெரிக்கா – விர்ஜீனியாவில் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

virginia shooting - 2026

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாகானத்தில் ஒரு கட்டட வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில், அங்கிருந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதித்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்களும் துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதாக மக்கள் நம்பினாலும், இதே அம்சம் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண விவகாரங்கள், கைகலப்பு, அடிதடி, தனிப்பட்ட நபர்களுக்கு வரும் மன அழுத்தம் இவை எல்லாம் கூட, பொதுமக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கியால் சுட்டு மக்களை கொல்லும் கொடூரங்களுக்கு காரணமாகியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பல நேரங்களில் பள்ளிகளில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடும்.

தற்போது விர்ஜினியா மாகாணத்தில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது விர்ஜினியா மாகாணத்தில் விர்ஜினியா பீச் மிகவும் பிரபலமானது.

இங்குள்ள ஒரு கட்டட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியோடு நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்! 4பேருக்கு வெள்ளிக்கிழமை இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

virginia mayor - 2026தகவலறிந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பொதுப் பணி செய்யும் அரசு ஊழியர் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விர்ஜீனியா மேயர் பாபி டையர், விர்ஜீனியா கடற்கரை வரலாற்றில் இது மிகவும் மோசமான நாள் என்று கூறியுள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட நபர் டிவாய்னி க்ரடோக் என்ற 40 வயதாகும் நபர் என்று தெரியவந்துள்ளது. அவர் விர்ஜீனியா பீச் பகுதியில் பப்ளிக் யுடிலிடி டிபார்மெண்டில் பணி புரிபவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories