அமெரிக்கா – விர்ஜீனியாவில் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

virginia shooting - 2026

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாகானத்தில் ஒரு கட்டட வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில், அங்கிருந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதித்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்களும் துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதாக மக்கள் நம்பினாலும், இதே அம்சம் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண விவகாரங்கள், கைகலப்பு, அடிதடி, தனிப்பட்ட நபர்களுக்கு வரும் மன அழுத்தம் இவை எல்லாம் கூட, பொதுமக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கியால் சுட்டு மக்களை கொல்லும் கொடூரங்களுக்கு காரணமாகியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பல நேரங்களில் பள்ளிகளில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடும்.

தற்போது விர்ஜினியா மாகாணத்தில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது விர்ஜினியா மாகாணத்தில் விர்ஜினியா பீச் மிகவும் பிரபலமானது.

இங்குள்ள ஒரு கட்டட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியோடு நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்! 4பேருக்கு வெள்ளிக்கிழமை இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

virginia mayor - 2026தகவலறிந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பொதுப் பணி செய்யும் அரசு ஊழியர் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விர்ஜீனியா மேயர் பாபி டையர், விர்ஜீனியா கடற்கரை வரலாற்றில் இது மிகவும் மோசமான நாள் என்று கூறியுள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட நபர் டிவாய்னி க்ரடோக் என்ற 40 வயதாகும் நபர் என்று தெரியவந்துள்ளது. அவர் விர்ஜீனியா பீச் பகுதியில் பப்ளிக் யுடிலிடி டிபார்மெண்டில் பணி புரிபவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories