அமெரிக்கா – விர்ஜீனியாவில் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

virginia shooting - 2026

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாகானத்தில் ஒரு கட்டட வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில், அங்கிருந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதித்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்களும் துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதாக மக்கள் நம்பினாலும், இதே அம்சம் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண விவகாரங்கள், கைகலப்பு, அடிதடி, தனிப்பட்ட நபர்களுக்கு வரும் மன அழுத்தம் இவை எல்லாம் கூட, பொதுமக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கியால் சுட்டு மக்களை கொல்லும் கொடூரங்களுக்கு காரணமாகியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பல நேரங்களில் பள்ளிகளில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடும்.

தற்போது விர்ஜினியா மாகாணத்தில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது விர்ஜினியா மாகாணத்தில் விர்ஜினியா பீச் மிகவும் பிரபலமானது.

இங்குள்ள ஒரு கட்டட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியோடு நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்! 4பேருக்கு வெள்ளிக்கிழமை இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

virginia mayor - 2026தகவலறிந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பொதுப் பணி செய்யும் அரசு ஊழியர் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விர்ஜீனியா மேயர் பாபி டையர், விர்ஜீனியா கடற்கரை வரலாற்றில் இது மிகவும் மோசமான நாள் என்று கூறியுள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட நபர் டிவாய்னி க்ரடோக் என்ற 40 வயதாகும் நபர் என்று தெரியவந்துள்ளது. அவர் விர்ஜீனியா பீச் பகுதியில் பப்ளிக் யுடிலிடி டிபார்மெண்டில் பணி புரிபவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Entertainment News

Popular Categories