December 6, 2025, 7:50 AM
23.8 C
Chennai

அமெரிக்கா – விர்ஜீனியாவில் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

virginia shooting - 2025

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாகானத்தில் ஒரு கட்டட வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில், அங்கிருந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதித்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்களும் துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதாக மக்கள் நம்பினாலும், இதே அம்சம் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண விவகாரங்கள், கைகலப்பு, அடிதடி, தனிப்பட்ட நபர்களுக்கு வரும் மன அழுத்தம் இவை எல்லாம் கூட, பொதுமக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கியால் சுட்டு மக்களை கொல்லும் கொடூரங்களுக்கு காரணமாகியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பல நேரங்களில் பள்ளிகளில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடும்.

தற்போது விர்ஜினியா மாகாணத்தில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது விர்ஜினியா மாகாணத்தில் விர்ஜினியா பீச் மிகவும் பிரபலமானது.

இங்குள்ள ஒரு கட்டட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியோடு நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்! 4பேருக்கு வெள்ளிக்கிழமை இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

virginia mayor - 2025தகவலறிந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பொதுப் பணி செய்யும் அரசு ஊழியர் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விர்ஜீனியா மேயர் பாபி டையர், விர்ஜீனியா கடற்கரை வரலாற்றில் இது மிகவும் மோசமான நாள் என்று கூறியுள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட நபர் டிவாய்னி க்ரடோக் என்ற 40 வயதாகும் நபர் என்று தெரியவந்துள்ளது. அவர் விர்ஜீனியா பீச் பகுதியில் பப்ளிக் யுடிலிடி டிபார்மெண்டில் பணி புரிபவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories