முன்னோர்கள் கூறிய திருஷ்டி கழிப்பு : திருஷ்டி சுத்திப் போடுவது எப்படி?

kan thirushti - 2026

திருஷ்டி என்பது சமஸ்கிருத சொல். திருஷ்டி என்ற சொல்லுக்கு பார்வை என்று பொருள். மற்றவர் பார்வையால் ஏற்படும் பாதகத்தைத்தான் திருஷ்டிகழித்தல் என்பார்கள்.  தமிழில் கண் திருஷ்டி கழித்தலை கண்னேறு கழித்தல் என்று கூறுவர்.

முதலில் குழந்தைக்கு எப்படி திருஷ்டி சுற்றி கழிப்பது …?!

பிறக்கும் குழந்தைகள் அனைவரும் அழகோ அழகுன்னு எல்லோரும் கொஞ்சுவார்கள். குழந்தைக்கு கருப்பு பொட்டு வைப்பார்கள். இது எல்லோராலும் செய்யக் கூடிய ஒன்று!

நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப் பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயிலில் தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதலான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வாலிப திருஷ்டி : ஒரு கைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக மூடிக் கொண்டு, இளைஞரையோ / இளைய வயதுப் பெண்ணையோ கிழக்கு நோக்கி உட்கார வைத்து இடமிருந்து வலமாக மூன்று தடவையும், வலமிருந்து இடமாகவும் மூன்று தடவை சுற்றி கையில் இருக்கும் உப்பை தண்ணீரில் போட வேண்டும். உப்பு கரைவது போன்று திருஷ்டி கரைந்து விடும் .

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

பெரியவர்களுக்கு: புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம், தெரு மண், இவற்றை சேகரித்து வைத்துக் கொண்டு, பெரியவர்களை தெரு வாசலில் கிழக்கு நோக்கி இருக்க வைத்து மண் சட்டிக்குள் ஊமத்தங்காய் படிகாரம் தெருமண் இவை மூன்றையும் போட்டு மண் சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி… தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று… மூன்று தெருமுனை சந்திக்கும் இடத்தில் போட்டு உடைக்கவும்!

பின்னர் கையில் ஒரு பெருக்குமாறு (துடைப்பம்) எடுத்துச் சென்று ஓரமாகப் பெருக்கி தள்ளவும். இதனால் யாருக்கும் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். பின்னர் வீடு திரும்பியவுடன் கை கால் கழுவி தலையில் சிறிது அளவு தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும் .

இதைச் செய்ய முடியாதவர்கள் கடுகு, மிளகாய், உப்பு சிறிது தெருமண் கையில் எடுத்து கொண்டு குழந்தையை உட்கார வைத்து ஊரு கண்ணு, உறவு கண்ணு நாய் கண்ணு, நரிக்கண்ணு நோய்க்கண்ணு நொள்ள கண்ணு கண்டக் கண்ணு கள்ளக் கண்ணு அந்தக் கண்ணு இந்தக் கண்ணு எல்லாம் கண்டபடி தொலையட்டும் என்று இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றிப் போட திருஷ்டி கழியும்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

பரிகார ஜோதிடர் S. காளிராஜன்,
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம், இலத்தூர் – நெல்லை மாவட்டம்- 627 803
எண்: 9843710327

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories