January 17, 2025, 7:37 AM
24 C
Chennai

சந்திராஷ்டம விளக்கம்

சந்திராஷ்டமம் விளக்கம் சந்திராஷ்டம கணிதம் சந்திராஷ்ட நட்சத்திரங்கள் (17ம் நட்சத்திரம்) மற்றும் இராசிகள் மன்மத(2015-16) வருட சந்திராஷ்டம தினங்கள் Manmatha Varusha Chandrashtama Dinam துன்முகி (2016-17)வருட சந்திராஷ்டம தினங்கள் Dunmugi Varusha Chandrashtama Dinam


சந்திராஷ்டம விளக்கம்: சந்திரன் + அஷ்டமம்(எட்டு) = சந்திராஷ்டமம் பொருள்: சந்திரன் நின்ற ராசியில் இருந்து எட்டாம் இடத்தில் இருப்பாதாகும் சந்திரன் பூமியை 27.322 நாட்களில் வலம் வரும் சுழற்சி காலத்தில் 12 இராசி மண்டலங்களையும் கடக்கும். சந்திரன் சஞ்சரிக்கும் மண்டலத்தில் இருந்து பின்புறத்தில் எட்டாம் இராசி மண்டலத்தில் பிறந்தவர்களுக்கு தொல்லைதரும் காலமாகும். சந்திராஷ்டமம் என்பது ஒருவரின் பிறந்த இராசியான “ஜென்ம ராசிக்கு” எட்டாம் இராசி (210 பாகை முதல் 240 பாகை கோண அளவு) மண்டலத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமான இரண்டே கால் நாட்களாகும். இங்கே கோசார சந்திரனை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். ஃஇராசிக்கட்டத்தில் உள்ள சந்திர நிலை. ஒரு இராசி என்றால்: 30 பாகை கோண அளவு, 2 ¼ நட்சத்திரங்கள், 9 பாதங்கள் உள்ளடக்கிய மண்டலமாகும் சந்திராஷ்ட நட்சத்திரம்: ஒருவரின் ஜன்ம நட்சத்திரத்திற்கு 17ம் நட்சத்திர (213 20 முதல் 226 40 வரை)காலம் சந்திராஷ்டம உச்சகாலமாகும். கணித முறைகள்: (படம் விளக்கம்) 1. இராசிக்கு எட்டாம் இடம் ஒருவரின் பிறந்த இராசிக்கு எட்டாம் இராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமாகும். இந்த முறைதான் நாள்காட்டி மற்றும் பஞ்சாங்கத்தில் இடம் பெறுகிறது. இதை மிக எளிதாக கணக்கிடமுடியும் 2.ஜன்ம சந்திர பாகை பிறந்த காலத்தில் சந்திரன் நின்ற பாகையை துவக்க புள்ளியாக வைத்து 210 முதல் 240 வரை சந்திரன் சஞ்சரிக்கும் காலமாகும். இது மிகச்சரியான மற்றும் துல்லியமானதாகும் ஆயினும் 360 பாகைக்கு தனித்தனியாக அச்சிடவும், இணையத்தில் வெளியிடவும் முடியாது என்பது இந்த முறையின் பின்னடைவாகும். மிகமுக்கிய முடிவுகள், திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்திட தினம் குறிக்க “இரண்டாம் முறை” யில் மட்டுமே ஜோதிடர்களின் துணைக்கொண்டு கணக்கிடவேண்டும். இதுவே சரியான முறையாகும். சந்திரனின் காரகத்துவம் வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு அதிக பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் நட்சத்திர சிந்தாமணி, குமார சாமியம் (கோசாரபடலம்), கோசார தீபிகை, உத்திரகாலமிருதம் மற்றும் பல சோதிஷ மூலகிரந்த நூல்கள் கூறுகின்றன. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவிண்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். மேலும் சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை. தீர்வுகள்: இக்காலத்தில் அமைதியை நாடி பொறுமையுடன் இருக்க வேண்டும். மனஅமைதிக்கு சந்திரனின் அதிதேவதையான பார்வதியை வணங்கி, சிவபுராணம் படித்தல் நன்று. மனதை ஒருமுகப்படுத்தும் யோகா – தியானம் – பிராணாயாமம் போன்ற முறைகளை கடைபிடித்து “ இன்று நாள் முழுவதும் பொறுமை காக்க வேண்டும்” எனும் தீர்மானத்துடன் இருப்பின் தொல்லைகள் குறையும். மிகமுக்கிய பிரச்சனைகள் மேலும் சிக்கலாகாமல் தவிற்கலாம். தானம்: இக்காலத்தில் சந்திரனின் தானியமான அரிசியை ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்யலாம். வெண்ணிற ஆடையை சாலைகளில் திரியும் மனநலம் பாதித்தவர்களுக்கு தரலாம்.

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் – பாலு சரவண சர்மா –

Sri Thanigai Panchangam – Prohithar – Tambaram Astrologer பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதக்ஞர் +91 9840369677

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!