December 5, 2025, 4:46 PM
27.9 C
Chennai

குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: சிம்மம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, சிம்ம ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…


simham rasi - 2025
சிம்ம ராசி :

மகம், பூரம் , உத்திரம் 1ம் பாதம் முடிய

80/100

கர்வமும், சண்டையிடுவதில் விருப்பமும், நிலையான குணங்களும், நம்பகத்தன்மையும் உடைய சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசியை குரு 7வருடங்களுக்கு பின் பார்வை இடுகிறார் அதனால் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த குரு பெயர்ச்சி எண்ணற்ற சந்தோஷங்களை தரும், மேலும் சனிபகவான் 23.1.2020ல் மகரராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் அதுவும் மிக அதிகமான நல்ல பலனை தரும். 11ல் இருக்கும் ராகு ஏற்கனவே நண்பர்கள் உறவினர்களால் நன்மை தந்திருப்பார் அது மேலும் அதிகரிக்கும்.

குடும்பத்தில் புதுவரவுகள் உண்டாகும், திருமணம் குழந்தை பாக்கியம் என்று. மேலும் இந்த குரு பெயர்ச்சியில் பொருளாதார வளம் மேம்படும், முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சமூகத்தில் மரியாதை கூடும், புனித யாத்திரைகள் உல்லாச பயணங்கள் என்று அடிக்கடி சென்றுவருவீர்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம் :

கடந்த வருடங்களில் அதிக மன அழுத்தமும் உடல்ரீதியான பாதிப்புகள் அதிகம் இருந்திருக்கும் அது தற்போது நீங்கிவிடும். பெரிய உடல் பாதிப்புகள் இருக்காது. குரு பார்வையும் நன்றாக இருப்பதால் ஆயுள் ஆரோக்கியம் மேம்படும், சனி 6ம் இடத்துக்கு செல்வது குடும்ப உறுப்பினர்களின் நாள்பட்ட வியாதிகளை குணமாக்கிடும். பொதுவாக இந்த குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி உங்களின் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

குடும்பம் மற்றும் உறவுகள் :

இதுவரை இருந்துவந்த பிணக்குகள் மறைந்து ஒற்றுமை பெருகும். கணவன் மனைவி பிரிந்து இருந்தால் இப்பொழுது சேர்ந்துவிடுவார்கள், வேலை மற்ற காரணங்களுக்காக குடும்பத்தை பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றாக இணைந்துவிடுவார்கள். உறவினர்கள் மரியாதையும் நல்ல பண்புடனும் நடந்து கொண்டு உதவுவார்கள் பிள்ளைகள் சொல்படி நடப்பார்கள், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு பாடு படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் :

எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும், வேலை தேடிக் கொண்டிருப்போருக்கு உடன் வேலை கிடைக்கும், உடன் வேலை செய்வோர் ஆதரவாக செயல் படுவர், அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறும், மேலதிகாரி அனுகூலமாக இருப்பார் விரும்பிய இடமாற்றம் வெளி நாட்டு வேலை வாய்ப்பு என்று சிறப்பாகவே இருக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பாராத ஊதிய உயர்வு கிடைக்கும், அரசாங்கத்தில் நன்மதிப்பு உண்டாகும்.

தொழிலதிபர்கள் / வியாபாரிகள்:

புதிய தொழில் விஸ்தரிப்பை தொடங்க ஏற்ற நேரம். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவருக்கும் இந்த குரு பெயர்ச்சி உகந்தது. சனி பெயர்ச்சியும் நன்மை தரும். இரட்டிப்பு லாபம் வரும் மகளிரை பங்குதாரராக கொண்ட நிறுவணங்கள் நல்ல லாபம் அடையும், தொழிலாளர்கள் ஒத்துழைப்பு, வங்கி கடன் கிடைத்தல், அரசாங்க சலுகைகள், கூட்டாளிகளின் ஒத்துழைப்பு என்று பெயர்ச்சி முழுவதுமே நன்றாக இருக்கும். தொழில் வளம் பெறும்.

கலைஞர்கள் :

புதிய வாய்ப்புகள் தேடி வரும், திரைத்துறை மீடியாவில் இருப்பவர்கள் பிரபலமாக வாய்ப்பு உண்டாகும், புகழ் பாராட்டுக்கள் கிடைக்கும், அரசாங்கத்தின் பாராட்டும் உண்டாகும். பணப்புழக்கம் தாராளம், விருந்து கேளிக்கைகள் ரசிகர்கள் உற்சாகம் என்று நன்றாகவே இருக்கும். சேமிப்பை அதிகப்படுத்துவது நல்லது.

அரசியல்வாதிகள் :

ஏங்கி தவித்து கொண்டிருந்த பதவி தேடிவரும், எதிரிகள் விலகுவர், தொண்டர்கள் உற்சாகத்துடன் களப்பணி ஆற்றுவர், மேலிடத்தில் செல்வாக்கு கூடும், வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொள்வீர்கள், பணப்புழக்கம் மிக தாராளம், அதிகாரமும் கைவரும்.

விவசாயிகள் :

விளைச்சல் அதிகரிக்கும், மானாவாரிப்பயிர்கள் அதிக லாபம் தரும். கால்நடைகள் நல்ல லாபத்தை தரும், வழக்குகள் சாதகமாகி பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள் மனம் நிம்மதி அடையும், குடும்பத்தில் குதூகலம் உண்டாகும், இல்லத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும், புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள் சனிபெயர்ச்சியும் ஆரோக்கியத்தையும் தந்து எதிரிகளை விரட்டி கடன் தொல்லையிலிருந்து பூரணமாக விடுபட வைக்கும்.

மாணவர்கள் :

ஜனன ஜாதகத்தில் புதன் சாதகமாக இருந்தால் இந்த குரு பெயர்ச்சி மிக அதிக மதிப்பெண்களை பெற்றுத்தரும், விரும்பிய பாடம் கல்லூரி கிடைக்கும், வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு உண்டாகும், போட்டி பந்தயங்களில் வெற்றியும் கிட்டும், ஆசிரியர் ஆலோசனைப்படி நடப்பதும் நல்லது தரும்.

பெண்கள் :

மகிழ்ச்சியை அதிகம் உண்டாக்கும் குரு பெயர்ச்சி, குடும்பம் ஒற்றுமை, கணவன் மனைவி நெருக்கம், ஆடை ஆபரண சேர்க்கை, திருமணத்தை எதிர்பார்த் திருப்போருக்கு திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் உண்டாகும், தீர்த்த யாத்திரைகள் குடும்பத்துடன் சுற்றுலா, விருந்து கேளிக்கைகள் செல்வீர்கள், பிள்ளைகளால் பெருமை உண்டாகும், உழைக்கும் மகளிருக்கு பதவி, சம்பளம் உயர்வு விரும்பிய இடமாற்றம், புதிய உத்தியோகம், வெளிநாட்டு வேலை என்று நன்றாகவே இருக்கும், சுயதொழில் செய்வோருக்கு லாபம், ஏற்றம் இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் :

தேய்பிறை அஷ்டமிநாளில் பைரவரை வணங்குவதும். ப்ரதோஷத்தன்று சிவனுக்கு நெய் விளக்கேற்றுவதும் தக்ஷிணாமூர்த்தியை வில்வமாலை கொண்டு அர்ச்சிப்பதும் நலம் தரும். குருப்ரீதியாக அன்னதானம் செய்யுங்கள். தக்ஷிணாமூர்த்தி காயத்ரியை அடிக்கடி சொல்லி கொண்டு இருக்கவும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்.

lakshmi narasimhachari - 2025

குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories