December 5, 2025, 4:46 PM
27.9 C
Chennai

குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: கடகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, கடக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

katakam rasi - 2025கடக ராசி :

புனர்பூசம் 4ம் பாதம் பூசம், ஆயில்யம் முடிய

55/100

சுறுசுறுப்பும் நயமான வார்த்தைகளில் மயங்கி விடுபவருமான கடகராசி அன்பர்களே!

குரு பகவான் 5லிருந்து 6க்கு செல்கிறார் இது ருண ரோக சத்ரு ஸ்தானம் ஏற்கனவே இங்கு சனி கேது இருக்கிறார்கள் பெரிய கஷ்டங்கள் இல்லை எனினும் சிறு சிறு தொந்தரவுகள் இருந்த வண்ணம் இருக்கும்.

குருவும் அவ்வப்போது மண உளைச்சலை கொடுப்பார் ஆனால் அதிசாரமாக குருபகவான் 7க்கு (மகர ராசிக்கு) பெயரும் ஏப்ரல் , மே , ஜூன் மாதங்கள் அதிக நன்மை உண்டாகும் உத்தியோகத்தில் தொழில் நல்ல நிலை ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படும்

குடும்பத்தில் மகிழ்ச்சி சுப நிகழ்வுகள் உண்டாகும். இருந்தாலும் பிப்ரவரி, மார்ச் , செப்டம்பர் அக்டோபர் 2020 இந்த மாதங்களில் அதிக கவனம் தேவை, இந்த மாதங்கள் அதிக சிக்கலை ஏற்படுத்தும், பண தட்டுப்பாடு, தொழிலில் இறக்கம், குடும்பத்தில் பிரச்சனை உடல் உபாதைகள் என்று ஏதேனும் துன்பத்தை தந்து கொண்டிருக்கும். 

மற்ற மாதகங்கள் நன்றாக இருப்பதால் இதை சமாளித்துவிடலாம். பொதுவில் இந்த குருபெயர்ச்சி நன்மை தீமை கலந்த கலவையாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம் :

சில நாள் நன்றாக இருக்கும் சில நாள் உடல் உபாதைகள் என்று மருத்துவ செலவுகளை கொடுக்கும், பிப்ரவரி மார்ச், செப்டம்பர், அக்டோபர் 2020 இந்த மாதகங்களில் அதிக உடல் உபாதைகள் அல்லது குடும்ப அங்கத்தினர்களுக்கு வைத்திய செலவுகள் என்று உண்டாகும், சரியான ஆகார பயிற்சி, தியான பயிற்சி வைத்தியர் ஆலோசனை படி நடத்தல் போன்றவை உடல் ஆரோக்கியத்தை நன்கு வைத்திருக்கும்.

குடும்பம் மற்றும் உறவுகள் :

வீண் வாக்குவாதங்களை முடிந்தவரையில் தவிர்த்துவிட்டால் குடும்பத்தில் பிரச்சனை வராது, கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போகுதல் நலம் தரும், பிள்ளைகளை அதிகம் கண்டிப்பதும் துன்பத்தை தரும், வேலை நிமித்தம், அல்லது வேறு காரணங்களுக்கு குடும்பத்தை பிரிதல் என்று இருக்கும். இருந்தாலும் சில சமயங்கள் ஒற்றுமையும் நல்ல சூழ்நிலைகளும் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் :

வேலையில் கவனம் செலுத்துல் நலம் தரும். பிப்ரவரி,மார்ச், செப்டம்பர் அக்டோபர் மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் புதிய வேலைக்கு முயற்சித்து கொண்டிருந்தால் உடன் கிடைக்கும். வேலையில் மன நிறைவு ஏற்படும் உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் வேலையில் ஈடுபடுவீர்கள் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மேலிடத்தில் வைத்த கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். மேற்படி மாதகங்களில் கவனமாக வேலை செய்தல் வீண் விவாதங்களை தவிர்த்தல் எவருடனும் அனுசரித்து செல்லுதல் நன்மை தரும்.

தொழிலதிபர்கள் /வியாபாரிகள் :

புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வரும் நேரம் இது. இருக்கின்ற தொழிலை விஸ்தாரம் செய்யலாம், அரசாங்க உதவி வங்கி உதவி போன்றவை தாராளமாக கிடைக்கும், மறைமுக எதிரிகள் மறைவர். தொழிலாளர்கள் சுறுசுறுப்புடன் இயங்கி அதிக லாபத்தை ஈட்டி தருவர் கூட்டு தொழில்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருந்தாலும் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்துவது நல்லது, 2020 பிப்ரவரி,மார்ச் ,செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மிகுந்த கவனத்துடன் எதையும் கையாளுதல் நலம் தரும்.

அரசியல்வாதிகள் :

புதிய பதவி தேடிவரும், மேலிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும், மக்களின் பாராட்டை பெறுவீர்கள் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவர் பணப்புழக்கம் தாராளம் இதுநாள் வரை இருந்துவந்த எதிர்களின் தொல்லை இனி இல்லை, என்று இருந்தாலும் எதிலும் கவனமாய் இருத்தல் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தல் தொண்டர்களை அனுசரித்து போகுதல் கவனமாய் பேசுதல் என்று இருந்தால் நன்மை உண்டாகும்.

கலைஞர்கள் :

புதிய ஒப்பந்தங்கள் கைகூடும், நல்ல வருமானம் வரும் சமூகத்தில் அந்தஸ்து கூடும் மக்களின் பாராட்டு கிடைக்கும், அரசின் விருதுகள் கிடைக்கும், கேளிக்கை விருந்து விழா என்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள், வெளிநாட்டு பயணம் நன்மை தரும். சக கலைஞர்களால் நன்மை உண்டு. நடுவில் கொஞ்சம் பணத்தட்டுப்பாடும் வரும் அநாவசிய செலவுகளை குறைப்பது நல்லது

விவசாயிகள் ;

கால் நடை மூலம் அதிக லாபம் கிடைக்கும், மகசூல் பெருகி வருமானம் கூடும். புதிய நிலம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும், வழக்குகளில் சாதகம் அதிகம், அக்கம்பக்கத்தாரோடு இணக்கமான நிலை இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும்.

மாணவர்கள் :

அதிக அக்கறையுடன் படிப்பதும், பெற்றோர் ஆசிரியர் சொல்படி நடப்பதும் நல்லது. போட்டி பந்தயங்கள் அதிக அனுகூலம் உண்டாகும், வெளிநாட்டு படிப்பு சிலருக்கு கைகூடும் மேல்படிப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு அது ஈடேறும். தொழில்கல்வி பயிலுவோருக்கு இது ஏற்ற காலம் நல்ல மதிப்பெண்கள் கிடைப்பதால் வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்கள் :

வீண் விவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை, பிள்ளைகளால் பெருமை சமூகத்தில் அந்தஸ்து, புனித யாத்திரைகள், ஆடை ஆபரண சேற்க்கை புதிய வீடு குடிபோகுதல் என்று அமர்க்களமாக இருக்கும். திருமணத்தை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கு விரைவிவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். வேலைக்கு செல்லும் மகளிருக்கும் சுய தொழில் செய்யும் பெண்களுக்கும் மிக சிறப்பான பலன்களை பெறுவர் பணவரவு தாராளம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உழைக்கும் மகளிரில் சிலர் புதிய சொத்து வாங்கலாம். பொதுவில் பிப்ரவரி,மார்ச் ,செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் எச்சரிக்கையாக இருத்தல் நலம் தரும்.

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் :

அருகில் தெக்ஷிணாமூர்த்தி கோவில் இருந்தால் சென்று விளக்கேற்றி வாருங்கள், சிவன் கோயில் அல்லது பெருமாள் கோவிலில் தாயார் சன்னதியில் முன் அமர்ந்து தியானம் செய்யுங்கள் தாயார் பெயரை உச்சரிக்கவும். முடிந்தவரை தான தர்மங்களைச் செய்வது நன்மை தரும். அனுமன் வழிபாடும் ராம நாமத்தைச் சொல்வதும் நல்ல பலனை தரும். அன்னதானம் செய்யுங்கள்

lakshmi narasimhachari - 2025

குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories