9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.
இதோ இந்த குரு பெயர்ச்சி, கடக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…
குரு பகவான் 5லிருந்து 6க்கு செல்கிறார் இது ருண ரோக சத்ரு ஸ்தானம் ஏற்கனவே இங்கு சனி கேது இருக்கிறார்கள் பெரிய கஷ்டங்கள் இல்லை எனினும் சிறு சிறு தொந்தரவுகள் இருந்த வண்ணம் இருக்கும்.
குருவும் அவ்வப்போது மண உளைச்சலை கொடுப்பார் ஆனால் அதிசாரமாக குருபகவான் 7க்கு (மகர ராசிக்கு) பெயரும் ஏப்ரல் , மே , ஜூன் மாதங்கள் அதிக நன்மை உண்டாகும் உத்தியோகத்தில் தொழில் நல்ல நிலை ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படும்
குடும்பத்தில் மகிழ்ச்சி சுப நிகழ்வுகள் உண்டாகும். இருந்தாலும் பிப்ரவரி, மார்ச் , செப்டம்பர் அக்டோபர் 2020 இந்த மாதங்களில் அதிக கவனம் தேவை, இந்த மாதங்கள் அதிக சிக்கலை ஏற்படுத்தும், பண தட்டுப்பாடு, தொழிலில் இறக்கம், குடும்பத்தில் பிரச்சனை உடல் உபாதைகள் என்று ஏதேனும் துன்பத்தை தந்து கொண்டிருக்கும்.
மற்ற மாதகங்கள் நன்றாக இருப்பதால் இதை சமாளித்துவிடலாம். பொதுவில் இந்த குருபெயர்ச்சி நன்மை தீமை கலந்த கலவையாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் :
சில நாள் நன்றாக இருக்கும் சில நாள் உடல் உபாதைகள் என்று மருத்துவ செலவுகளை கொடுக்கும், பிப்ரவரி மார்ச், செப்டம்பர், அக்டோபர் 2020 இந்த மாதகங்களில் அதிக உடல் உபாதைகள் அல்லது குடும்ப அங்கத்தினர்களுக்கு வைத்திய செலவுகள் என்று உண்டாகும், சரியான ஆகார பயிற்சி, தியான பயிற்சி வைத்தியர் ஆலோசனை படி நடத்தல் போன்றவை உடல் ஆரோக்கியத்தை நன்கு வைத்திருக்கும்.
குடும்பம் மற்றும் உறவுகள் :
வீண் வாக்குவாதங்களை முடிந்தவரையில் தவிர்த்துவிட்டால் குடும்பத்தில் பிரச்சனை வராது, கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போகுதல் நலம் தரும், பிள்ளைகளை அதிகம் கண்டிப்பதும் துன்பத்தை தரும், வேலை நிமித்தம், அல்லது வேறு காரணங்களுக்கு குடும்பத்தை பிரிதல் என்று இருக்கும். இருந்தாலும் சில சமயங்கள் ஒற்றுமையும் நல்ல சூழ்நிலைகளும் இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் :
வேலையில் கவனம் செலுத்துல் நலம் தரும். பிப்ரவரி,மார்ச், செப்டம்பர் அக்டோபர் மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் புதிய வேலைக்கு முயற்சித்து கொண்டிருந்தால் உடன் கிடைக்கும். வேலையில் மன நிறைவு ஏற்படும் உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் வேலையில் ஈடுபடுவீர்கள் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மேலிடத்தில் வைத்த கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். மேற்படி மாதகங்களில் கவனமாக வேலை செய்தல் வீண் விவாதங்களை தவிர்த்தல் எவருடனும் அனுசரித்து செல்லுதல் நன்மை தரும்.
தொழிலதிபர்கள் /வியாபாரிகள் :
புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வரும் நேரம் இது. இருக்கின்ற தொழிலை விஸ்தாரம் செய்யலாம், அரசாங்க உதவி வங்கி உதவி போன்றவை தாராளமாக கிடைக்கும், மறைமுக எதிரிகள் மறைவர். தொழிலாளர்கள் சுறுசுறுப்புடன் இயங்கி அதிக லாபத்தை ஈட்டி தருவர் கூட்டு தொழில்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருந்தாலும் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்துவது நல்லது, 2020 பிப்ரவரி,மார்ச் ,செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மிகுந்த கவனத்துடன் எதையும் கையாளுதல் நலம் தரும்.
அரசியல்வாதிகள் :
புதிய பதவி தேடிவரும், மேலிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும், மக்களின் பாராட்டை பெறுவீர்கள் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவர் பணப்புழக்கம் தாராளம் இதுநாள் வரை இருந்துவந்த எதிர்களின் தொல்லை இனி இல்லை, என்று இருந்தாலும் எதிலும் கவனமாய் இருத்தல் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தல் தொண்டர்களை அனுசரித்து போகுதல் கவனமாய் பேசுதல் என்று இருந்தால் நன்மை உண்டாகும்.
கலைஞர்கள் :
புதிய ஒப்பந்தங்கள் கைகூடும், நல்ல வருமானம் வரும் சமூகத்தில் அந்தஸ்து கூடும் மக்களின் பாராட்டு கிடைக்கும், அரசின் விருதுகள் கிடைக்கும், கேளிக்கை விருந்து விழா என்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள், வெளிநாட்டு பயணம் நன்மை தரும். சக கலைஞர்களால் நன்மை உண்டு. நடுவில் கொஞ்சம் பணத்தட்டுப்பாடும் வரும் அநாவசிய செலவுகளை குறைப்பது நல்லது
விவசாயிகள் ;
கால் நடை மூலம் அதிக லாபம் கிடைக்கும், மகசூல் பெருகி வருமானம் கூடும். புதிய நிலம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும், வழக்குகளில் சாதகம் அதிகம், அக்கம்பக்கத்தாரோடு இணக்கமான நிலை இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும்.
மாணவர்கள் :
அதிக அக்கறையுடன் படிப்பதும், பெற்றோர் ஆசிரியர் சொல்படி நடப்பதும் நல்லது. போட்டி பந்தயங்கள் அதிக அனுகூலம் உண்டாகும், வெளிநாட்டு படிப்பு சிலருக்கு கைகூடும் மேல்படிப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு அது ஈடேறும். தொழில்கல்வி பயிலுவோருக்கு இது ஏற்ற காலம் நல்ல மதிப்பெண்கள் கிடைப்பதால் வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்கள் :
வீண் விவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை, பிள்ளைகளால் பெருமை சமூகத்தில் அந்தஸ்து, புனித யாத்திரைகள், ஆடை ஆபரண சேற்க்கை புதிய வீடு குடிபோகுதல் என்று அமர்க்களமாக இருக்கும். திருமணத்தை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கு விரைவிவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். வேலைக்கு செல்லும் மகளிருக்கும் சுய தொழில் செய்யும் பெண்களுக்கும் மிக சிறப்பான பலன்களை பெறுவர் பணவரவு தாராளம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உழைக்கும் மகளிரில் சிலர் புதிய சொத்து வாங்கலாம். பொதுவில் பிப்ரவரி,மார்ச் ,செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் எச்சரிக்கையாக இருத்தல் நலம் தரும்.
வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் :
அருகில் தெக்ஷிணாமூர்த்தி கோவில் இருந்தால் சென்று விளக்கேற்றி வாருங்கள், சிவன் கோயில் அல்லது பெருமாள் கோவிலில் தாயார் சன்னதியில் முன் அமர்ந்து தியானம் செய்யுங்கள் தாயார் பெயரை உச்சரிக்கவும். முடிந்தவரை தான தர்மங்களைச் செய்வது நன்மை தரும். அனுமன் வழிபாடும் ராம நாமத்தைச் சொல்வதும் நல்ல பலனை தரும். அன்னதானம் செய்யுங்கள்
குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம் FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808 Skype / Whats app : 8056207965 Email.: mannargudirs1960@gmail.com Contact Timings for fixing appointment – 6 AM to 8 AM & 8.30 PM to 10 PM
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.