9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.
இதோ இந்த குரு பெயர்ச்சி, விருச்சிக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…
விருச்சிக ராசி :
விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய
85/100
தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் விருச்சிகராசி அன்பர்களே!
இது வரை கடந்த காலங்களில் ஏழரை சனி தாக்கம் ஜென்ம குரு தாக்கம் ராகு கேதுவின் தாக்கம் என பலவித பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள், இனி குருபகவான் 2க்கு போகிறார்,
மேலும் சனி பகவான் 3ம் இடத்துக்கு ஜனவரி 23,2020ல் பெயர்கிறார், முழுவதுமாக கஷ்டங்களில் இருந்து விடுபடுகிறீர்கள், பொருளாதாரம் மேம்படும், வசதி வாய்ப்புகள் தேடிவரும், மனம் சந்தோஷத்தில் குதிக்கும் முயற்சிகள் வெற்றி பெறும், வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும்,
புதிய உறவுகள் புதிய சூழல் நன்றாக இருக்கும். குரு பெயர்ச்சி மட்டுமல்ல அடுத்துவரும் சனி, ராகு கேது பெயர்ச்சிகளும் நல்ல பலனை தரப்போவதால் வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு முன்னேறுங்கள்.
உடல் ஆரோக்கியம் :
ஆரோக்கியம் மேம்படும், நாள்பட்ட வியாதிகள் விரைவில் குணமடையும், குடும்ப அங்கத்தினரின் உடல் ஆரோக்கியமும் மேம்படும், ஜனவரியில் சனி பெயர்ச்சி நல்ல மன தைரியத்தையும், உடலில் தெம்பையும் கொடுக்கும், இதுவரை தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்திருப்பீர்கள் இனி நிம்மதியான தூக்கம் இருக்கும். விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள்.
குடும்பம் மற்றும் உறவுகள் :
விலகி இருந்த உறவுகள் இனி தேடி வருவர், குடும்பத்தில் உங்கள் மதிப்பு கூடும், பலவித காரணங்களுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்போர் இனி ஒன்றாய் சேர்ந்து இருக்கும் காலம் இது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும், சமூக அந்தஸ்து கூடும். உறவினர்கள் விட்டுக்கொடுத்து உங்களுக்கு உதவுவார்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய சொந்தங்கள் உருவாகும், இல்லத்தில் புதுவரவுகள் உண்டு.
உத்தியோகஸ்தர்கள்:
இதுவரை உழைத்ததற்கு இனி பயன் பெறுவீர்கள், அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறும், சம்பள உயர்வு, பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் என்றும் வேலையில் ஒரு உற்சாகமும் உண்டாகும். புதிய வேலைக்கு முயற்சித்தால் நிச்சயம் கிடைக்கும் வெளிநாடுகளில் வேலை பார்ப்போர், இனி கைநிறைய சம்பாத்தியம் மகிழ்ச்சியான வேலை என்று இருக்கும். வேலை பளு குறையும்
தொழிலதிபர்கள்/வியாபாரிகள் :
இதுவரை இருந்துவந்த மந்த நிலை மாறி ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும், புதிய தொழில் விஸ்தரிப்பு, அரசு உதவி, வங்கி உதவி என்று கிடைத்து நன்றாக தொழில் ஓடும், கூட்டாளிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும், புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் இது ஏற்ற காலம், நிச்சயம் வெற்றி கிட்டும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனங்கள் நல்ல முன்னேற்றத்தை காணும், வங்கி கடன் எளிதில் கிடைக்கும், போட்டியாளர்கள் எதிரிகள் பின்வாங்குவர், தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வீர்கள்.
கலைஞர்கள் :
புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும், கைவிட்டுப்போன வாய்ப்புகள் திரும்ப கிடைக்கும், பணப்புழக்கம் தாராளம், நண்பர்கள் விருந்து கேளிக்கைகள் என்று செல்வீர்கள், புகழ் பாராட்டுகள் தேடி வரும், ரசிகர்கள் உற்சாகம் உங்களை மேலும் சிறப்பாக்கும், சேமிக்கும் வழக்கம் நன்மை தரும். அரசாங்க உதவியும் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் :
கைவிட்டு போன பதவி அல்லது புதிய பதவி கிடைத்து மறுபடியும் புகழ் அந்தஸ்து பெறுவீர்கள், தொண்டர்களின் ஒத்துழைப்பும், பணம் தாராளமாக செலவு செய்தும், எதையும் தக்க வைத்து கொள்வீர்கள் எதிரிகளின் பலம் குறையும், மேலிடத்தில் நெருக்கம் ஏற்படும். வருகின்ற வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி கொள்வீர்கள்.
விவசாயிகள் :
மகசூல் அதிகரிக்கும், பணப்பயிர்கள் நல்ல வருமானத்தை தரும், கால்நடைகள் வருமானத்தை தரும், இதுவரை பலவித வழக்குகளில் சிக்கி இருந்தால் அந்த வழக்குகள் சாதகமாக இருக்கும் அல்லது வழக்கு நீங்கிவிடும், பொருளாதாரம் பெருகும், புதிய நிலம் வாங்குவீர்கள் , வீட்டில் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும், குடும்ப ஒற்றுமை நிறைந்திருக்கும்.
மாணவர்கள் :
குரு பார்வை மற்றும் புதனின் சஞ்சாரங்கள் நல்ல படிப்பை தரும், விரும்பிய பாடம், கல்லூரி, வெளிநாட்டு படிப்பு என்று சிறப்பாக இருக்கும், நண்பர்களும் உதவுவார்கள், பெற்றோர் ஆசிரியர் பாராட்டுகளை பெறுவீர்கள் போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள் தீய நட்புகள் விலகும். மனம் ஒருமுக படும்.
பெண்கள் :
சந்தோஷத்தின் உச்சியில் இருப்பீர்கள், இதுவரை பட்ட துன்பங்கள் அனைத்தும் விலகுகின்றன, குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும், விலகிய சொந்தங்கள் நெருங்கி வருவர், குழந்தைகளால் சந்தோஷம், கணவன் மனைவி நெருக்கம், புனித யாத்திரை செல்லுதல், ஆடை ஆபரண சேர்க்கை, புதிய வீடு குடிபோகுதல் அக்கம்பக்கத்தாரோடு இணக்கமான உறவுகள், இதுவரை தடைபட்ட திருமணம் கைகூடுதல், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தோருக்கு அது கிட்டும். உழைக்கும் மகளிருக்கு விரும்பிய இடமாற்றம், ஊக்கத்தொகை, பதவி உயர்வு என்று நன்றாகவே இருக்கும். சுய தொழில் செய்வோர் நல்ல ஏற்றம் பெறுவர்.
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் :
மிக நன்றாக இருப்பதால் ஓம் நமசிவாய என்று சொல்லி கொண்டே இருங்கள். சிவாஷ்டகம் லிங்காஷ்டகம் போன்று சொல்வதும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடும் நலம் தரும். அருகில் உள்ள சிவன் கோவிலில் திங்கள் கிழமைகளில் பால் வாங்கி அபிஷேகத்துக்கு தருவது நலம் தரும். முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள் தர்ம காரியங்களில் ஈடுபடுங்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் -கணித்து வழங்குபவர்… லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம் FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808 Skype / Whats app : 8056207965 Email.: mannargudirs1960@gmail.com Contact Timings for fixing appointment – 6 AM to 8 AM & 8.30 PM to 10 PM
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.