பஞ்சாங்கம் – ஆக.5 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

Published:

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இன்றைய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்  | 5.8.2026 | புதன்கிழமை

ஆடி ~ 20 { 5.8.2026 } புதன் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆடி மாதம் { கடக மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ மாலை 6.07 PM வரை ஸப்தமி பின் அஷ்டமி.
நாள்~ புதன் கிழமை { சௌம்ய வாஸரம் }
நக்ஷத்திரம் ~ இரவு 7.33 PM வரை அச்வினி பின் பரணி.
யோகம் ~ சூலம்.
கரணம் ~ பத்திரை / பவம் / பாலவம்.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்.
நல்லநேரம் ~ காலை 9.00 AM ~ 10.00 AM & மாலை 2.00 PM ~ 3.00 PM.
ராகுகாலம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
எமகண்டம் ~ காலை 7.30 AM ~ 9.00 AM.
குளிகை ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 AM and 2.00 to 3.00 PM
சூரியஉதயம் ~ காலை 6.05 AM.
சந்திராஷ்டமம் ~ கன்னி.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ ஸப்தமி.
இன்று ~ கரிநாள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
  !!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
  !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

DHIN NEW LOGO - 2026

ஹோரை புதன்கிழமை

காலை

6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்

பிற்பகல்

12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்

மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026
thiruvalluvar deivapulavar

இன்றைய (5-8-2026) ராசிபலன்கள்


மேஷம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தை பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். தோற்றப்பொலிவில் சில மாற்றம் உண்டாகும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 30 - வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : சிந்தனைகள் மேம்படும்.
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.


ரிஷபம்

உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். பயணம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்களைப் பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்த தன்மையை ஏற்படுத்தும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.


மிதுனம்

வியாபார பணிகளில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். சமூக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு செயலிலும் திருப்தியில்லாத மனநிலை ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை : பயணங்கள் கைகூடும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.


கடகம்

உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகளில் இருந்த குழப்பங்கள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் இருந்த தாமதம் குறையும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : குழப்பங்கள் குறையும்.
பூசம் : தாமதம் குறையும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சிம்மம்

கணவன் மனைவிக்கு இருந்த வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாகும். புதியவர்களின் நட்புக்களால் உற்சாகம் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். மனதளவில் தெளிவுகளும் புத்துணர்ச்சியும் ஏற்படும். பணி சார்ந்த பழைய பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : வேறுபாடுகள் குறையும்.
பூரம் : உற்சாகம் ஏற்படும்.
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.


கன்னி

தந்தையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் உருவாகும். சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. பணி புரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 31 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

துலாம்

நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கலை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். தவறி போன சில பொருள்கள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்.
விசாகம் : சாதகமான நாள்.


விருச்சிகம்

நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். மனை விற்பனையில் இழுபறியான சூழல் உண்டாகும். புதிய வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வழக்கு செயல்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : இழுபறியான நாள்.
கேட்டை : முடிவுகள் கிடைக்கும்.


தனுசு

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த ஆசைகள் கைகூடுவதற்கான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

மூலம் : புரிதல் மேம்படும்.
பூராடம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


மகரம்

சிந்தனையில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : குழப்பங்கள் நீங்கும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : வேறுபாடுகள் ஏற்படும்.


கும்பம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் இறுக்கமான சூழல்கள் உண்டாகும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் இருக்கவும். உதவும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செய்யும் முயற்சிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பும் பணியும் அதிகரிக்கும். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.


மீனம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். நெருக்கடியாக இருந்த சூழல்கள் மாறும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். சமூகம் குறித்த புதிய கண்ணோட்டம் பிறக்கும். மனதளவில் இருந்த கவலைகள் மறையும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.01 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.
ரேவதி : கவலைகள் மறையும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

இன்றைய சிந்தனைக்கு…

பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!

Related articles

Recent articles

spot_img