
|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
இன்றைய பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் | 29.4.2026 | புதன்கிழமை
சித்திரை ~ 16 { 29.4.2026 } புதன் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் {மேஷ மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 9.00 pm வரை த்ரயோதசி சதுர்தசி.
நாள்~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ இரவு 1.11 AM வரை ஹஸ்தம் பின் சித்திரை.
யோகம் ~ ஹர்ஷணம்
கரணம் ~ கௌலவம் / தைதுளை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 am and 2.00 to 3.00 pm
சூரியஉதயம் ~ காலை 6.02.
சந்திராஷ்டமம் ~ கும்பம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ த்ரயோதசி.
இன்று ~ ப்ரதோஷம்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (29-4-2026) ராசிபலன்கள்
மேஷம்
நிர்வாக திறமைகள் வெளிப்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். உயர்பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மற்றும் அறிமுகங்கள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீர் தனவரவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : அறிமுகங்கள் கிடைக்கும்.
கிருத்திகை : வரவுகள் உண்டாகும்.
ரிஷபம்
உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : புரிதல்கள் ஏற்படும்.
ரோகிணி : ஆதரவுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை :😀 வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : ஆதாயம் மேம்படும்.
திருவாதிரை : ஆர்வம் ஏற்படும்.
புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
கடகம்
மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்படியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் தீர்வுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
புனர்பூசம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
பூசம் : நெருக்கடிகள் குறையும்.
ஆயில்யம் : தீர்வுகள் கிடைக்கும்.
சிம்மம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான பணிகளுக்கு தீர்வு ஏற்படும். தந்தையிடம் வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : நிதானம் வேண்டும்.
பூரம் : தீர்வு ஏற்படும்.
உத்திரம் : ஆசைகள் நிறைவேறும்.
கன்னி
தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கை துணைவர் பிடிவாதமாக இருப்பார்கள். திட்டமிட்ட ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை குறைக்கவும். குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சிந்தனைகளில் கவனம்.
அஸ்தம் : விழிப்புடன் செயல்படவும்.
சித்திரை : மாற்றம் ஏற்படும்.
துலாம்
மற்றவர்களின் குறைகளை மாறுபட்ட முறையில் சுட்டிக் காட்டுவது நல்லது. சக ஊழியர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாகி கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
சுவாதி : வரவுகள் கிடைக்கும்.
விசாகம் : புதுமையான நாள்.
விருச்சிகம்
திறமைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
அனுஷம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
கேட்டை : ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு
உயரதிகாரிகள் மூலம் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். உல்லாச பயணம் சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தன வரவு மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
பூராடம் : வாய்ப்புகள் அமையும்.
உத்திராடம் : அறிமுகங்கள் கிடைக்கும்.
மகரம்
புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைக்கவும். திடீரென புதிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : எண்ணங்கள் பிறக்கும்.
அவிட்டம் : முடிவுகள் பிறக்கும்.
கும்பம்
எண்ணிய சில பணிகள் செய்வதில் காலதாமதம் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். குழந்தைகள் வழியில் கவனம் வேண்டும். பொது பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். நிர்வாக துறைகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கால்களில் வலிகள் ஏற்பட்டு நீங்கும். விவசாய பணிகளில் அலைச்சல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
அவிட்டம் : தாமதம் உண்டாகும்.
சதயம் : மாற்றமான நாள்.
பூரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.
மீனம்
உத்தியோக பணிகளில் இருந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : இடர்பாடுகள் குறையும்.
உத்திரட்டாதி : விரயங்கள் உண்டாகும்.
ரேவதி : முயற்சிகள் கைகூடும்.
தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
இன்றைய பொன்மொழி
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…
பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!





Seems very attractive.