December 6, 2025, 2:56 PM
29 C
Chennai

2020 ஆண்டு பலன்: கடகம்

rasi katakam - 2025

கடக ராசி
கால புருஷ தத்துவத்தின்படி நாலாவது ராசி கடக ராசி. இந்த ராசிக்கு குரு பகவான் ஆறாமிடத்தில் ஆட்சியாக இருக்கிறார் இதனால் இவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சனைகளும் மன ரீதியான சில பிரச்சினைகளும் வர வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு சில எதிரிகளும் இந்த ஆண்டு தென் படக்கூடும்.

வருகிற ஜனவரி மாதம் இறுதியில் சனியானவர் ஏழாமிடத்தில் ஆட்சியாக உள்ளார், இதனால் இந்த ராசியில் உள்ளவர்களுக்கு கணவன் மனைவியிடையே சில பிரச்சினைகள் வரக்கூடும்.
ஏழாமிடத்தில் சனி ஆட்சி பெற்று ராசியை பார்ப்பதால் திருமணத்தடைகள் வர வாய்ப்புண்டு.

தொழில் செய்பவர்கள் இடையே சில குழப்பங்களும் பிரச்சினைகளும் சில கருத்து வேறுபாடுகளும் வரக்கூடும். அதனால் தொழில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு பெரிய பலன் தராது. கடக ராசியை பொறுத்தவரை, இந்த குருப்பெயர்ச்சி மற்றும் வருகிற சனிப்பெயர்ச்சி அந்த அளவுக்கு பயனளிக்காது.

இதுநாள் வரை 12ம் இடமான விரய ஸ்தானத்தில் அமர்ந்திருந்த ராகு பகவான் வருகிற ஆண்டு இறுதியில் ரிஷப ராசியான லாப ஸ்தானத்திற்கு செல்வதால் இந்த ராசியினருக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். தற்போது குரு ராசியின் பன்னிரெண்டாம் இடத்தை நேராக பார்ப்பதால் செலவுகள் கட்டுக்குள் வரக்கூடும்.

குரு தனது ஐந்தாம் பார்வையால் ராசியின் பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அதுபோல வேலையில் இருப்பவர்களுக்கு உன்னதமான நிலை வரக்கூடும். குரு தனது 9ம் பார்வையால் ராசியின் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பத்திற்கு தேவையான பொருளாதார வசதிகள் பெருக்கிக்கொள்ள நல்ல வாய்ப்பு உண்டு. கடக ராசியில் உள்ள மாணவர்களுக்கு ஆண்டு முற்பகுதியில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் ஆண்டு இறுதியில் சுமாரான பலன்களே கிடைக்கும். இருந்தாலும் உயர்கல்வி படிக்க கூடிய மாணவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலனே கிடைக்கும்.

இந்த கிரக நிலைகள் எல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த 2020ஆம் ஆண்டு கடக ராசியை பொறுத்த வரைக்கும் சுமார் 70 லிருந்து 75 சதம் வரை நல்ல பலன் கிடைக்கும்.

இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!

கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.

ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.

ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : Ast8610023308@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories