December 6, 2025, 3:31 PM
29.4 C
Chennai

2020 ஆண்டு பலன்: துலாம்

rasi thulam - 2025

துலாம் ராசி
காலபுருஷ தத்துவத்தின்படி 7வது ராசி துலா ராசி. இந்த ராசிக்கு தற்போது குருபகவான் 3-ம் இடமான மறைவு ஸ்தானத்தில் ஆட்சியாக உள்ளார். துலா ராசிக்கு குருவே மூன்றாம் மற்றும் ஆறாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால் இவர் மூன்றாம் இடமான மறைவு ஸ்தானத்தில் அமைவதில் ஒரு சிறப்பு என்றே சொல்லலாம்.

வருகிற ஜனவரி மாதம் சனி பெயர்ச்சி துலா ராசிக்கு சனியானவர் மூன்றாம் இடத்திலிருந்த 4-ஆம் இடத்துக்கு சென்று ஆட்சியாக இருக்கிறார். இது அவர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாக மாறப்போகிறது.

துலா ராசி அர்தாஷ்டம சனி பாதிப்பால் தொல்லைகள் அனுபவிக்க கூடிய நிலை ஏற்படும், அதனால் இந்த சனிப்பெயர்ச்சி அவர்களுக்கு உகந்ததாக இல்லை.
துலாம் ராசிக்கு குருவின் பார்வை நல்ல யோகத்தை கொடுக்கும் ஏனென்றால் குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள்.

தனது ஐந்தாம் பார்வையாக ஏழாம் இடத்தை பார்ப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கக் கூடிய யோகமும், சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல யோகமும் கிடைக்கப்போகிறது என்று சொல்லலாம். அதுபோல குரு தனது பார்வையால் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் இந்த ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்க கூடும்.

ஒன்பதாமிடத்தில் கடந்த ஒரு வருடமாக ராகுபகவான் பல தொல்லைகளை கொடுத்து இருப்பார். இந்த குருவின் பார்வையால் ராகு சுபத்துவம் அடைகிறார். குரு தனது 9ம் பார்வையாக ராசிக்கு பதினோராம் இடமான லாப ஸ்தானத்தை பார்க்கிறார் இந்த ராசியை பொறுத்தவரை எதிர்பாராத பணவரவு வேலையில் சம்பள உயர்வு இப்படிப்பட்ட யோகங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.

சனி நான்காம் இடத்தில் ஆட்சி ஆக போகிறார். அவரே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்திற்கும் அதிபதி, அதனால் இந்த ராசியில் இருக்கும் மாணவர்கள் படிப்பில் மந்தநிலை ஏற்படும். நன்றாக முயற்சி செய்து படித்தால் மட்டுமே வெற்றி உண்டாகும். சனி தனது மூன்றாம் பார்வையாக ராசிக்கு 6ம் இடத்தை பார்ப்பதால் இவர்களுக்குள்ள உடல் ரீதியான பிரச்சினைகள் குறையக் கூடிய வாய்ப்பு உண்டு.

எதிரிகள் மறையக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. சனி தனது பார்வையாக ராசியின் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், வேலை செய்பவர்களுக்கு உகந்த காலம் இல்லை.

வேலை செய்யும் இடத்தில் பல பிரச்சினைகள் சந்திக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். புதிதாக வேலை தேடுபவர்கள் நல்ல முயற்சி எடுத்தால் மட்டுமே எதிர்பார்த்த வேலை கிடைக்கும். தனது பத்தாம் பார்வையாக ராசியை பார்ப்பதால் உடல் ரீதியாக சில பிரச்சனைகள் வரக்கூடும்.

துலா ராசியை பொறுத்தவரை அர்தாஷ்டம சனி ஒருபுறம், சனியின் பார்வை ஒருபுறம். இப்படி இரண்டு வகையிலும் உடல் ரீதியாக சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள், நிறைய அலைச்சல், மனவேதனை இதுபோன்ற சூழ்நிலையில் தள்ளப்படுவார்கள்.

ஆண்டு இறுதியில் வரக்கூடிய குரு பெயர்ச்சி கூட துலா ராசிக்கு அந்த அளவுக்கு யோகம் இல்லை. அதுபோல ஆண்டு இறுதியில் வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சியும், ராகு எட்டாம் இடத்தில் மறைவது ஓரளவுக்கு நல்ல பலன் கொடுத்தாலும், கேது இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆவது உகந்த நிலை இல்லை.

எல்லா அமைப்புகளும் பார்க்கும்போது துலா ராசிக்கு இந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 75 முதல் 80 சதம் வரை நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லலாம்.

இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!

கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.

ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.

ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : Ast8610023308@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories