December 6, 2025, 5:13 PM
29.4 C
Chennai

2020 ஆண்டு பலன்: கன்னி

rasi kanni - 2025

கன்னி ராசி :
காலபுருஷ தத்துவத்தின்படி ஆறாவது ராசி கன்னி ராசி. இந்த ராசிக்கு மறைவு ஸ்தானமான மூன்றாம் இடத்திலிருந்த குரு, தற்போது 4-ம் இடத்தில் ஆட்சியாக உள்ளதால் நல்ல யோகத்தை தரக்கூடிய ஆண்டாகவே அமைய இருக்கிறது. தாயார் மற்றும் தாய்வழி சொந்தங்களுடன் அன்பு பாராட்ட கூடிய வாய்ப்புக்கள் உண்டு. சொந்த வீடு வாங்க கூடிய யோகம், சொந்தமாக நிலம் வாங்க கூடிய யோகம், வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் நிறைய பேருக்கு கிடைக்கும்.

வருகிற ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி இவர்களுக்கு பெரிய நிம்மதியை தரவல்லது. ஏனென்றால், இது நாள் வரை அர்த்தாஷ்டமச் சனியாக இருந்த சனி பகவான் ஐந்தாம் இடத்தில் ஆட்சியாக உள்ளார். கன்னி ராசியை பொறுத்தவரை இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறைந்து நல்ல ஒரு நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

ஐந்தாமிடத்தில் சனி ஆட்சியாக இருப்பது அந்த அளவுக்கு சிறந்த யோகம் தராது.

குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு சில தடைகள் உண்டாகலாம். அதுபோல மாணவர்கள் படிப்பில் மந்த நிலை ஏற்படக்கூடும். மாணவர்கள் பெற்றோர் சொல் பேச்சு கேட்காமல் இருப்பார்கள்.

குரு தனது ஐந்தாம் பார்வையால் ராசிக்கு எட்டாம் இடத்தை பார்ப்பதால் வராத கடன் வந்துசேரும். அதுபோல மனரீதியான குழப்பங்கள் எல்லாம் விலகி நல்ல நிலை ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரக்கூடும். 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், பலருக்கு வேலையில் உன்னத நிலை ஏற்படும்.

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடிய யோகம் இந்த ஆண்டு நிச்சயம் கிடைக்கும். குரு தனது 9ம் பார்வையால் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் இதுவரை வீண் விரயங்கள் கட்டுக்குள் வரும்.

ராகு தற்போதைய நிலை நன்றாக இருந்தால் கூட வருகிற ஆண்டு இறுதியில் ராகு 9-ஆம் இடத்தில் பெயர்ச்சி ஆவது அந்த அளவுக்கு யோகம் தராது. ஆனால் கேது மூன்றாம் இடமான மறைவு ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆவது நல்ல யோகத்தை தரும் என்று சொல்லலாம்.

சனி தனது பார்வையால் ராசியின் ஏழாமிடம் பதினோராம் இடம் மற்றும் இரண்டாம் இடம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணம் நடைபெறுவதில் பிரச்சனை, கணவன் மனைவி இடையே சில குழப்பங்கள், பொருளாதாரத்தில் மந்தநிலை, குடும்ப சூழ்நிலையில் சில பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புக்கள் உண்டு.

குரு பார்வை சிறப்பாக இருந்தாலும் சனியின் பார்வை சில பிரச்சினைகளை தரக்கூடும்.

எல்லா அமைப்புகளும் வைத்து பார்க்கும்போது இந்த ஆண்டு இந்த ராசிக்கு சுமார் 75 லிருந்து 80 சதம் வரை நல்ல பலன் தரும் என்று சொல்லலாம்

இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!

கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.

ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.

ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : Ast8610023308@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories