February 11, 2025, 10:18 AM
27.5 C
Chennai

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடனை தள்ளுபடி செய்வோம்!” எப்டிங்க ஸ்டாலின்..?!

stalin-in-coimbatore
stalin-in-coimbatore

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடனை தள்ளுபடி செய்வோம்’ என்று கூறும் ஸ்டாலின் அவர்களே…

கல்வி கடன் என்பது வங்கிகளால் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லாத ஒரு விவகாரத்தில், இயலாத வாக்குறுதியை அளிப்பது மக்களை ஏமாற்றும் செயலே. ஆனால், உண்மையிலேயே அக்கறை இருந்தால், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை குறைக்க உத்தரவிடுவோம், கல்வி உதவி தொகையை அதிகரிப்போம்” என்ற செயல்படுத்த முடிகிற வாக்குறுதிகளை அளிக்கலாம்.

ஆனால், கல்வியை தமிழக அரசியல்வாதிகள் வியாபாரமாக்கிய காரணத்தால் அந்த வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற சுயநலத்தின் அடிப்படையிலேயே, மக்களின் சேமிப்பை தள்ளுபடியாக அறிவிப்போம் என்று சொல்வது நியாயமா? மேலும், தள்ளுபடி என்கிற பரபரப்பு அறிவிப்பால் மாணவர்கள் கடனை செலுத்துவதில் தயக்கம் காட்டுவது அவர்களுக்கே பிரச்சினையாக அமைகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிபில் உள்ளிட்ட பல்வேறு நிதி மதிப்பீட்டு நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தாத மாணவர்களின் பட்டியலை வெளியிடுவதனால், எதிர்காலத்தில் அவர்களின் மேற்படிப்பு, வாகனக்கடன், வீட்டுக்கடன் ஆகியவைகளை வங்கிகள் அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். இதனால் மாணவர்களின் எதிர்காலம்,வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனபதை அறிந்து கொள்ளுங்கள்.

படிப்புக்கேற்ற வேலை என்ற பசப்பு வார்த்தைகளை கூறி, தமிழக அரசியல்வாதிகள் பொறியியல் கல்லூரிகளை துவக்கி கோடி கோடியாக சேர்த்தனர். ஆனால், இருக்கும் வேலைக்கேற்ற கல்வியை பயிலாமல், படித்த படிப்புக்கேற்ற வேலையில்லாமல் மாணவர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். கல்வி கடன்களில், இந்தியாவின் வாராக்கடன்களில் 40 விழுக்காடு தமிழகத்தினுடையது என்பதை தாங்கள் அறிவீர்களா? இதற்கு காரணம், வேலைவாய்ப்புக்கேற்ற கல்வியை கொடுக்காதது, தரமான கல்வியை அளிக்காதது, கல்வி துறையில் முறைகேடுகள் போன்றவைகளே என்பது தங்களுக்கு தெரியுமா?
தேவைக்கேற்ற (Demand) உற்பத்தி (Supply) என்பது பொருளாதார கோட்பாட்டின் ஆதாரம். அதே போல் தான் கட்டமைப்பில் உள்ள பணிகளுக்கேற்ற கல்வி என்பது ஆதாரம். ஆனால் கடந்த சில தசாப்தங்களாக தமிழக அரசியல்வாதிகளின் சுயநலத்தால், தமிழகத்தில் வேலைக்கேற்ற கல்வி இல்லாமல் போனதே வேலைவாய்ப்பின்மைக்கு, படித்திருந்தாலும் குறைந்த ஊதியத்தை பெறுவதற்கான காரணம்.

ஆகவே, ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே மாணவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை செழிக்க வைக்க முடியும் எனபதை உணருங்கள். தேவைக்கேற்ற கல்வியை கொடுப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைக்க முடியும். அதை தான் புதிய தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. ஓட்டுக்காக, பதவிக்காக, அரசியல் அதிகாரத்திற்காக மாணவர்களின் வாழ்வில் தேவையற்ற குழப்பத்தை முயலவேண்டாம். தரமான, திறனான, தேவையான கல்வியை கொடுப்போம் என கூற முயற்சியுங்கள்.

கடன் தள்ளுபடி என்ற பெயரில் மாணவர்களை பின்னுக்கு தள்ளி கடனாளியாக்காதீர்கள்.

  • நாராயணன் திருப்பதி,
    செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories