இது வெற்றி வேல் வீரவேல் என முழங்கிய பூமி! மெய்ப்பித்துள்ளார் நீரஜ் சோப்ரா!

neeraj4
neeraj4

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்னும் இரு நாளே எஞ்சியிருக்கும் நிலையில் இந்தியா முதல் தங்க பதக்கம் பெற்று அசத்தியிருக்கின்றது. ஹரியானாவின் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா அந்த தங்கத்தை பெற்று கொடுத்திருக்கின்றார், அப்படியே பல சாதனைகளை பதிவு செய்திருக்கின்றார்!

அவர் இந்திய தடகளத்தில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் வீரர் எனும் சாதனையினை படைத்து அசத்தியிருக்கின்றார், அப்படியே 87.5 மீட்டர் தூரம் ஈட்டி வீசி ஒலிம்பிக் சாதனையினையும் இந்தியா சார்பில் படைத்திருக்கின்றார்.

24 வயதாகும் நீரஜ் சோப்ரா மிக இளம் வயதிலே கவனிக்கப் பட்டவர், 2016ல் அவர் செய்த தடகள சாதனைக்காக ராணுவ பணி ஒதுக்கப்பட்டது. இப்பொழுது அப்பணிக்கு தான் மிக சரியானவன் என நிருபித்திருக்கின்றார், அவருக்கு தேசம் உச்சி முகர்ந்து உணர்ச்சி பெருக்கில் வாழ்த்தி கொண்டிருக்கின்றது
தேசத்தின் வீரர்கள் வென்றால் வாழ்த்துவதும், தோற்ற வீரர்களுக்கு ஆறுதல் சொல்லி உற்சாகபடுத்துவதும் பாரத பிரதமரின் வழமை, அவர் இப்பொழுது வாழ்த்தி கொண்டிருக்கின்றார்.

பஞ்சாப் அரசு ஏற்கனவே அறிவித்தபடி 1 கோடி பரிசினை உறுதி செய்திருக்கின்றது, மத்திய அரசு அதை இரட்டிப்பாக்கவும் வாய்ப்பு உண்டு. காரணம் போட்டியாளர்கள் அப்படி!

தன் அபார வீச்சில் தகுதி சுற்றில் இருந்து இறுதி சுற்றுவரை வந்தார் நீரஜ் சோப்ரா அவருக்கு போட்டியாளராக ஜெர்மானியரும் இன்னும் சிலரும் வந்தார்கள் அவர்களில் பாகிஸ்தான் வீரரும் ஒருவர் அவர் கவனிக்கப்பட்டார்! அந்த பாகிஸ்தான் வீரரை பின்னுக்கு தள்ளி தங்கம் பெற்றிருக்கும் அவரின் சாதனை இரட்டிப்பான சாதனை மட்டுமல்ல எவ்வளவு பாராட்டினாலும் ஈடே இல்லா பெரும் சாதனை!

தேசம் தங்க மகனை வாழ்த்தி மிகபெரிய மரியாதையுடன் வரவேற்க காத்து கொண்டிருக்கின்றது. உலக அரங்கில் இந்தியாவின் மானம் காத்து தங்கம் வாங்கி தேசத்தை கவுவரத்திய அவருக்கு “மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா” விருதை எடுத்து வைத்து காத்திருக்கின்றது டெல்லி. இது “வெற்றி வேல் வீரவேல்” என முழங்கிய பூமி, அதை மெய்பித்திருக்கின்றார் அந்த இந்தியன் நீரஜ் சோப்ரா

  • ஸ்டான்லி ராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories