இது வெற்றி வேல் வீரவேல் என முழங்கிய பூமி! மெய்ப்பித்துள்ளார் நீரஜ் சோப்ரா!

neeraj4
neeraj4

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்னும் இரு நாளே எஞ்சியிருக்கும் நிலையில் இந்தியா முதல் தங்க பதக்கம் பெற்று அசத்தியிருக்கின்றது. ஹரியானாவின் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா அந்த தங்கத்தை பெற்று கொடுத்திருக்கின்றார், அப்படியே பல சாதனைகளை பதிவு செய்திருக்கின்றார்!

அவர் இந்திய தடகளத்தில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் வீரர் எனும் சாதனையினை படைத்து அசத்தியிருக்கின்றார், அப்படியே 87.5 மீட்டர் தூரம் ஈட்டி வீசி ஒலிம்பிக் சாதனையினையும் இந்தியா சார்பில் படைத்திருக்கின்றார்.

24 வயதாகும் நீரஜ் சோப்ரா மிக இளம் வயதிலே கவனிக்கப் பட்டவர், 2016ல் அவர் செய்த தடகள சாதனைக்காக ராணுவ பணி ஒதுக்கப்பட்டது. இப்பொழுது அப்பணிக்கு தான் மிக சரியானவன் என நிருபித்திருக்கின்றார், அவருக்கு தேசம் உச்சி முகர்ந்து உணர்ச்சி பெருக்கில் வாழ்த்தி கொண்டிருக்கின்றது
தேசத்தின் வீரர்கள் வென்றால் வாழ்த்துவதும், தோற்ற வீரர்களுக்கு ஆறுதல் சொல்லி உற்சாகபடுத்துவதும் பாரத பிரதமரின் வழமை, அவர் இப்பொழுது வாழ்த்தி கொண்டிருக்கின்றார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

பஞ்சாப் அரசு ஏற்கனவே அறிவித்தபடி 1 கோடி பரிசினை உறுதி செய்திருக்கின்றது, மத்திய அரசு அதை இரட்டிப்பாக்கவும் வாய்ப்பு உண்டு. காரணம் போட்டியாளர்கள் அப்படி!

தன் அபார வீச்சில் தகுதி சுற்றில் இருந்து இறுதி சுற்றுவரை வந்தார் நீரஜ் சோப்ரா அவருக்கு போட்டியாளராக ஜெர்மானியரும் இன்னும் சிலரும் வந்தார்கள் அவர்களில் பாகிஸ்தான் வீரரும் ஒருவர் அவர் கவனிக்கப்பட்டார்! அந்த பாகிஸ்தான் வீரரை பின்னுக்கு தள்ளி தங்கம் பெற்றிருக்கும் அவரின் சாதனை இரட்டிப்பான சாதனை மட்டுமல்ல எவ்வளவு பாராட்டினாலும் ஈடே இல்லா பெரும் சாதனை!

தேசம் தங்க மகனை வாழ்த்தி மிகபெரிய மரியாதையுடன் வரவேற்க காத்து கொண்டிருக்கின்றது. உலக அரங்கில் இந்தியாவின் மானம் காத்து தங்கம் வாங்கி தேசத்தை கவுவரத்திய அவருக்கு “மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா” விருதை எடுத்து வைத்து காத்திருக்கின்றது டெல்லி. இது “வெற்றி வேல் வீரவேல்” என முழங்கிய பூமி, அதை மெய்பித்திருக்கின்றார் அந்த இந்தியன் நீரஜ் சோப்ரா

  • ஸ்டான்லி ராஜன்
ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories