தீபாவளி – தமிழர் பண்டிகையா?

images 2022 10 16T175134.081 1 - 2026

தீபாவளி – தமிழர் பண்டிகையா?
ஆசிரியர் மாணவர் உரையாடல்

– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

மாணவி: சார், தமிழர்கள் தீபாவளியை எதற்குக் கொண்டாடுகிறார்கள்?

ஆசிரியர்: எதற்காக கேட்கிறாய் எனப் புரியவில்லை. இருந்தாலும். தீபாவளி இந்திய நாட்டில் வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது. நாம் தீபாவலி கொண்டாடுவதில் என்ன சந்தேகம் வந்தது.

மாணவி: தமிழ்ச் சங்க காலத்தில் இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தக் குறிப்பும் இலக்கியத்தில் இல்லை.

ஆசிரியர்: அதனால் என்ன? சங்க காலத்தில் நாம் பீட்சா, பர்கர் தின்றதாகக்கூட செய்தி இருக்காது. இப்போது சாப்பிடவில்லையா? சங்க காலத்தில் ஆண்கள் பேண்ட் அணிந்ததாகவோ, பெண்கள் ஜீன்ஸ் அணிந்ததாகவோ கூட செய்தி இருக்காது. இப்போது அணியவில்லையா? சங்க இலக்கியத்தில் சொல்லவில்லை என்பதற்காக நாம் அந்த உணவுகளையோ, ஆடைகளையோ தவிர்க்கிறோமா?

மாணவி: இப்போது நாம் மட்டும் கொண்டாடுகிறோமே ஏன்?

ஆசிரியர்: நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கிறிஸ்மஸ் கொண்டாடியதில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாம் மிலாடி நபி கொண்டாடியதில்லை. ஆனால் இன்று கொண்டாடிவருகிறோம். அதைப் போலத்தான் இதுவும்.

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

மாணவி: தமிழர்களின் பண்டிகைப் பற்றிப் பேசும்போது நீங்கள் மற்ற மதத்தின் பண்டிகைகள் பற்றி பேசுறீங்களே?! அப்படினா தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை என்பது தெளிவாகிறது. அது இந்துமத பண்டிகை என்று புரிகிறது.

04 Nov02 Diwali - 2026
04 Nov02 Diwali

ஆசிரியர்: இது இந்துக்கள் வேறு, தமிழர்கள் வேறு என்று கூறும் ஒரு பிரிவினரால் ஏற்பட்ட குழப்பம்.

மாணவி: சரி, கிறிஸ்துமஸ் கிறிஸ்து பிறந்த நாள், மிலாடி நபி
முகமதுநபி பிறந்தநாள். தீபாவளி யாருடைய பிறந்த நாள் சார்?

ஆசிரியர்: தீபாவளி – தீமை அழிந்து அமைதி பிறந்த நாள்.

மாணவி : நரகாசிரன் இறந்தநாள் என்று சொல்கிறார்களே. மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத் தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் போது இந்துமதம் மட்டும் நரகாசுரனின் இறந்த தினத்தை ஏன் இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடுகிறது?

ஆசிரியர்: இதுகூட இந்து மதத்தை, இந்தியாவில் பல காலமாக மக்களிடம் இருந்து வரும் மதத்தைக் குறைகூற எழுந்த வாதம். நரகாசுரன் இறந்த நாள் அல்ல. தீமை அழிந்து அமைதி பிறந்த நாள்; இருள் அழிந்து ஒளி பிறந்த நாள்; ஒவ்வொரு வீட்டிலி, மகிழ்ச்சி நிலவும் நாள்.பெண்களுக்கு பாதுகாப்பை உண்டாக்கிய நாள்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

மாணவி: பெண்களுக்குப் பாதுகாப்பா? யாரால் ஏற்பட்டது?

ஆசிரியர்: ஸ்ரீ கிருஷ்ணரால்.

மாணவி: ஸ்ரீ கிருஷ்ணர் வட நாட்டைச் சேர்ந்தவர் அல்லவா? அவரே 16008 பெண்களைத் திருமணம் புரிந்துகொண்டார் எனச் சொல்கிறார்கள். அவர் எப்படி பெண்களைப் பாதுகாத்திருக்க முடியும்.

ஆசிரியர்: நரகாசுரன், 16000 பெண்களைச் சிறை பிடித்து வைத்திருந்தான். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களைக் காப்பாற்றினார். அதனால்தான் பெண்களின் பாதுகாப்பு பற்றிய தினம் எனச் சொன்னேன்.

மாணவி: ஆனால் நரகாசுரன் என்ற தமிழனை கிருஷ்ணர் என்ற ஆரியர் கொன்ற தினம்தானே இந்த நாள்.

ஆசிரியர்: ஆரியர், திராவிடர் கொள்கையே தவறானது என்று பல ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாம் இன்னும் ஆரியர் திராவிடர் பிரிவினை பற்றி பேசுகிறோம் என்பது நமது வரலாற்று அறிவின் ஆழத்தை விளக்குகிறது. அது போகட்டும். நரகாசுரன் அசாம் பகுதியை ஆண்ட ஒரு அரசன் என்று புராணங்கள் கூறுகின்றன. அவன் எப்படி தமிழனாவான்?

மாணவி: அப்படியானால் கிருஷ்ணர் யார்? அவர் வடநாட்டு அரசர் இல்லையா?

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

ஆசிரியர்: தொல்காப்பியத்தில் வரும் “மாயோன் மேய காடுறை உலகம்” என்பதில் வரும் மாயோன் திருமால்தான். அகநானூறு, புறநானூற்றில் இராமரைப் பற்றிய செய்திகள் இருக்கின்றன. சிலப்பதிகாரம் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் பூம்புகாரில் கோயில்கள் இருந்ததாகக் கூறுகிறது. இப்போது சொல் கிருஷ்ணர் வடநாடு அரசர் என்றால் தமிழ்ப் புலவர்கள் அவர் பெயரை ஏன் பாடல்களில் சொல்ல வேண்டும்?

மாணவி; அப்ப தீபாவளிப் பண்டிகை நம்முடைய பண்டிகைதானா?

ஆசிரியர்: ஆமாம். அதிலென்ன சந்தேகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories