அயோத்தி சரயு நதிக் கரையில் 15.76 லட்சம் அகல்விளக்கு தீபங்கள் -கின்னஸ் சாதனை..

Published:

1781248 ayothi light 1 - 2026
1781249 ayothi light 2 - 2026

தீபாவளிப் பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக் கரையில் 15.76 லட்சம் அகல்விளக்குகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய பிரதமா் நரேந்திர மோடி, கடவுள் ராமரைப் போல உறுதியாக இருந்தால், நாட்டைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லைப் பிரதமா் மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாட்டினாா். கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தீபாவளிப் பண்டிகையைப் பிரதமா் மோடி அயோத்தியில் கொண்டாடினாா்.

Deepotsav celebrations - 2026
500x300 1781246 ayothi light - 2026

அதையடுத்து சரயு நதிக்கரையில் நடைபெற்ற தீபோத்ஸவத்தில் மோடி பங்கேற்றாா். பிரதமர் நரேந்திர மோடி தீப உற்சவத்தை தொடங்கி வைத்ததும் அடுத்தடுத்து 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள் சரயு நதிக்கரையில் ஏற்றி வைக்கப்பட்டன. 

19 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்று அகல் விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைத்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாதனையை கண்டு ரசித்தனர். இந்த புதிய சாதனையை அடைய அவாத் பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் முக்கிய பங்கு வகித்தனர். 

இதனைப் பதிவு செய்ய கின்னஸ் சாதனை அமைப்பின் அதிகாரிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சான்றிதழை வழங்கினர். 

பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியில் தீபோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக லேசர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 6-வது ஆண்டாக தீப உற்சவ திருவிழாவை பிரதமர் மோடி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தது உலகில் அதிகளவில் பேசப்படுகிறது. சரயு நதிக்கரை படித்துறையில் மொத்தம் 15 லட்சத்து 76 ஆயிரம் மண் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டது இரவில் ஜொலித்தது.அப்போது ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் என்ற முழக்கம் அயோத்தி முழுவதும் எதிரொலித்தது. அயோத்தியில் உள்ள அவத் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் இதில் பங்கேற்றனர். ஒரே நேரத்தில் இவ்வளவு விளக்கு ஏற்றப்பட்டது புதிய கின்னஸ் சாதனையை படைத்தது. பிரதமர் மோடி முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள், நேரில் பார்த்தனர்.

புதிய கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை அந்நிறுவன அதிகாரிகள், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்கினர். கடந்த ஆண்டு நடைபெற்ற அயோத்தி தீப உற்சவ திருவிழாவில் 9 லட்சத்து 41 ஆயிரம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முதல்முறையாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

1781247 ayothi light - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img