பழநீ… நடுநிலைகள் இங்கே தேவையில்லை!

Published:

1783428 palani murugan temple - 2026

பழனி… உண்மைச் சம்பவம்.. பல வருடங்களுக்கு முன்பு.. மூலஸ்தானத்திற்கு பின்புறம்.. தற்போது உள்ளது போல் கம்பி கிராதிகள் ஏதும் இல்லாத காலம்..

கட்டண தரிசனம் ஏதும் இல்லாத காலம்.. ஆறுகால பூஜை, அல்லது முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு வருபவர்கள் மட்டுமே அவ்வழியே மூலஸ்தானம் செல்வர்…

தர்ம தரிசனம், கட்டணமில்லா தரிசனம், இலவச தரிசனம் என்று தற்போது அழைக்கப்படும் வியாபார தந்திரங்கள் இல்லாத போது.. நேர்மையான , இந்து மதம் பற்றி அறிந்த, பழனியில் Palaniandavar college of oriental culture( later named as Indian culture) கல்லூரியில் பயின்ற TNPSCயில் அப்போது கோவில் E.O தேர்வுக்கு அது கட்டாயம்..எப்போதும் வேட்டி சட்டை, திருநீறு அணிந்த நிர்வாக அதிகாரிகள் மட்டுமே பணியாற்றிய காலம்..

அந்த மூலஸ்தானத்தின் பின்புறம் கற்சுவரில் சிறிது சந்தனம் தடவி, கருப்பு தாயத்துகளை வைத்துக்கொண்டு ஒரு பாயம்மா.. கருப்பு புர்கா வேசங்கள் வராத காலம்..எம்ப்ராயடரி போட்ட ஒரு வெள்ளைத்துணியை போர்த்திக்கொண்டு.. “ பழனி பாவா, அவுலியா” என்று ஏதோ சொல்லி தாயத்து கட்டி( நம்மக்களுக்கு எங்கே வேண்டுமானாலும் கைகளை நீட்டும் வழக்கமாச்சே!) “ வியாபாரத்தை ஆரம்பிச்சது…

அப்போதெல்லாம்..இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி போன்று எதுவுமே இல்லாத காலம்..

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

மூலஸ்தானத்திற்கு பின்புறம் அந்த தாயத்து கட்டும் வியாபாரம் கொஞ்சம் களை கட்டிய பின் தேவஸ்தான நிர்வாகம் விழித்து கொண்டது ( போட்டி பிஸினஸை பார்த்தோ என்னவோ !).. உடனடியாக அந்த பாயம்மாவை விரட்டி அந்த இடத்தில் கம்பி கிராதிகள் போட்டுவிட்டார்கள்.,

( அந்த மூலஸ்தான சுவற்றில் கைகளை இரண்டையும் விரித்து வைத்து மனதில் வேண்டுதல் வைத்து நிற்போம்.. இரு உள்ளங்கைகளும் ஒன்று சேரும்!)… தற்போது 200ரூ டிக்கட் வரிசை உள்ளே செல்லுமிடம்.. அடிவாரம் பாதவிநாயகர் கோவில் தொடங்கி.. யாணைப்பாதை, படி மண்டபங்கள் முழுவதும் அமைதி மார்க்கத்தினர் கடைகள் மட்டுமே..!

“இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை”

என்ற இந்த அறிவிப்பு தமிழகத்தில் பிரபலமான கோவில்கள் அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு பின் இருக்கும்..

பழனி கோவில் தற்போது ஒரு மாபெரும் business centre …கோவிலில் சாந்நித்யம் என்பது தேடவேண்டிய நிலைமையில்… கும்பாபிசேகம் முடிந்தபின் சகட்டு மேனிக்கு அமைச்சர் முதல் அதிகாரிகள் குடும்பம் வரை மூலஸ்தானத்திற்குள் நுழைந்த காட்சி வைரலாக சுற்றியது..

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

முன்பு துப்புரவு பணியில் மட்டுமே பெண்களை கோவில்களில் இருந்தனர்.. இப்போது முக்கிய பதவிகளில்.. பெண்கள்.. மாதவிடாய் காலத்திலும் உள்ளே.. அங்கே எத்தனை ஊழியர்கள் மாற்று மத்த்தினர் என்றும் தெரியாது..

மாற்று மத ஆட்கள் அமைச்சராயிருந்தாலும் உள்ளே அனுமதிக்கக்கூடாது..( திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மனோ தங்கராஜை அனுமதித்தார்கள்)

இந்த விசயத்தில் குருவாயூர் கோவிலுள்.. இந்திரா காந்தி, மன்மோகன்சிங், ஏன் யேசுதாஸைக்கூட அனுமதிக்கவில்லை… நமது கோவில்கள் கண்காட்சி கூடங்கள் இல்லை.. இதை நம்மக்கள் முதலில் உணரவேண்டும்..

நடுநிலை வாதம் பேசுவோர் இதில் நுழைய வேண்டாம்

  • முரளிநாதன் குரு
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img