சிதம்பரம்: மீண்டும் மீண்டும் உள்நோக்கத்துடன் மூக்கை நுழைக்கும் அறநிலையத் துறை அதிகாரிகள்!

chidambaram nataraja temple inside images - 2026
chidambaram nataraja temple inside images

சிதம்பரம் நடராஜர் கோயில் மீது கண் வைத்துள்ள திமுக அரசின் அறநிலையத்துறை அதிகாரிகள், மீண்டும் மீண்டும் அங்கே பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனி திருமஞ்சன விழாக் காலத்தை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையை அகற்ற வேண்டும் என்று கூறிய அறநிலையத் துறை அதிகாரிகளிடம், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஞாயிறு அன்று தேரோட்டமும், ஆனி திருமஞ்சன தரிசனமும் நடப்பதை ஒட்டி, 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவில் கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று தெரிவித்து, கோயில் தீட்சிதர்கள் தரப்பில் அறிவிப்புப் பலகை வைக்கப் பட்டது. இதை அடுத்து சிலர் இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

உடனே, சிதம்பரம், தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா, தாசில்தார் செல்வகுமார், எஸ்.ஐ.,க்கள் சங்கர், பொன்மகரம் மற்றும் போலீசார் என நாத்திக திமுக., அரசின் அலுவலர்கள் ஒரு படையே கோவிலுக்குள் திரண்டு வந்து, தீட்சிதர்கள் வைத்துள்ள அறிவிப்புப் பலகையை அகற்றிவிட்டு, கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அடாவடியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், ‘விழா நிகழ்வு முடியும் வரை பக்தர்கள் கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை; கனகசபை மீது அறிவிப்புப் பலகை வைக்கக்கூடாது என்று சொல்ல சட்டத்தில் அனுமதி இல்லை. அறநிலைத்துறை உயரதிகாரிகள் அனுமதியுடன் தான் அறிவிப்பு பலகை வைத்துள்ளோம்’ எனக் கூறினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. வெகுநேரம் நடந்த வாக்குவாதத்துக்குப் பின் அறநிலையத்துறை அதிகாரிகளும், போலீசாரும் கோவிலில் இருந்து வெளியேறினர். அப்போது, பக்தர்கள் அளித்த புகாரால் அந்த அறிவிப்புப் பலகையை அகற்ற அங்கே வந்ததாகவும், தனது பணியைச் செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாகவும் இது குறித்து போலீஸ் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார் செயல் அலுவலர் சரண்யா.

ALSO READ:  வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

இது குறித்து தீட்சிதர்கள் தரப்பில் விளக்கம் கூறிய போது, அதிகாரிகள் மற்றும் சிலர் கோவில் தேரோட்டம் மற்றும் தரிசனத்தை நிறுத்த வேண்டுமென்றே பிரச்னை செய்கின்றனர். தேர் மற்றும் தரிசனத்தின் போது, கருவறையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜரை கனகசபையில் எழுந்தருளச் செய்து பூஜை செய்து வெளியே கொண்டு வருவோம். அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் பக்தர்களை கனசபையில் இந்த நான்கு நாட்களுக்கு மட்டும் அனுமதிப்பதில்லை. மேலும், திருவிழாவிற்காக நடராஜருக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த நகைகள் வைக்கப்பட்டுள்ளன. கருவறையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜர் தேரில் எழுந்தருள வெளியே கொண்டு வரும் பணிகள் நடைபெறும்போது பாதுகாப்பு கருதி கனகசபை மீது பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. இது வெகுகாலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. இதில் புதிதாக எதுவும் இல்லை. எங்களது பணியை செய்யவிடாமல் அறநிலையத்துறை செயல் அலுவலரும் அறநிலையத்துறை அதிகாரிகளும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர் என்று கூறினர்.

பழனி கோயில் அறிவிப்பு பலகை அகற்றம் அதைத் தொடர்ந்து சிதம்பரம் கோயிலிலும் தங்கள் கைவரிசையை காட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் இறங்கியது ஆகிய செயல்பாடுகளால் தமிழகத்தில் ஹிந்து பக்தர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Entertainment News

Popular Categories