காங்கிரஸ் என்ற வாஷிங் மெஷின்

selvaperunthagai ks alagiri edited - 2026

என் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையை ரவுடி என்று அண்ணாமலை சொல்லி விட்டார் அவரை ஒரு பிடி பிடிக்காமல் விடமாட்டேன் – சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் MP – இது செய்தி

இனி நம் கற்பனை உரையாடல்!

நிருபர் : ரவுடித்தனம் செய்ததற்காக ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முறை குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தார்களே அப்ப ஒரு ரவுடி கிடையாதா?

சசி : அது அவர் புரட்சி பாரதம் கட்சியில் பயணம் செய்த போது நடந்தது அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : சரி அவரை இன்னொரு முறை அதே ஜெயலலிதா குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : உங்க கட்சி அலுவலகத்தை அடியாள்களோடு வந்து அடித்து நொறுக்கிறாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா ?

சசி : அப்ப அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார் .

நிருபர் : ஆடிட்டர் பாண்டியன் வழக்கில் போலீஸ் பிடிக்க சென்றபோது சுவர் ஏறி குதித்ததில் கால் முறிந்து விட்டது அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் புதிய தமிழகம் கட்சியில் இருந்தார் எங்க கட்சியில் கிடையாது.

நிருபர் : நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியதற்காக போலீசார் ஒருமுறை அவரை கைது செய்தார்களே, அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்பதான் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கி இருந்தார்கள் அந்த நேரம் அவர் எந்த கட்சியிலும் இல்லாமல் இருந்தார் அப்ப அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : ஏழாவது வகுப்பு பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது சாதி சண்டை போட்டு சக மாணவர்களின் சட்டையை கிழித்து போட்டாரே அப்ப ஒரு ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை மாணவராக இருந்தார் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

அப்படி என்றால் ஒருவன் எத்தனை கொலை செய்தாலும் பரவாயில்லை, எத்தனை வெடிகுண்டு சம்பவங்களை நடத்தினாலும் பரவாயில்லை?

எத்தனை ரூபாய் கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை,

எத்தனை முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை,

அதோடு உங்கள் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அடித்து உடைத்தவன் என்றாலும் பரவாயில்லை,

ஏன் உங்கள் கட்சி தேசிய தலைவர் ராஜீவ் காந்தியை போட்டு தள்ளிய விடுதலைப் புலிகளோடு தொடர்பில் உள்ளவன் என்றாலும் பரவாயில்லை,

அவன் காங்கிரஸ் கட்சிக்கு வந்து விட்டால் அவனுக்கு தலைவர் பதவி கொடுத்து விடுவீர்கள் அப்படித்தானே?

நீங்க பாஜகவை வாஷிங் மெஷின் என்று சொன்னீங்க பாஜகவை விட பெரிய வாஷிங் மெஷின் காங்கிரஸ் தான்.

–சமூகத் தள வைரல் பகிர்வு–

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories