January 25, 2025, 2:25 PM
28.7 C
Chennai

காங்கிரஸ் என்ற வாஷிங் மெஷின்

என் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையை ரவுடி என்று அண்ணாமலை சொல்லி விட்டார் அவரை ஒரு பிடி பிடிக்காமல் விடமாட்டேன் – சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் MP – இது செய்தி

இனி நம் கற்பனை உரையாடல்!

நிருபர் : ரவுடித்தனம் செய்ததற்காக ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முறை குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தார்களே அப்ப ஒரு ரவுடி கிடையாதா?

சசி : அது அவர் புரட்சி பாரதம் கட்சியில் பயணம் செய்த போது நடந்தது அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : சரி அவரை இன்னொரு முறை அதே ஜெயலலிதா குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : உங்க கட்சி அலுவலகத்தை அடியாள்களோடு வந்து அடித்து நொறுக்கிறாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா ?

ALSO READ:  பிராமணர்களின் உரிமைக் குரல்!

சசி : அப்ப அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார் .

நிருபர் : ஆடிட்டர் பாண்டியன் வழக்கில் போலீஸ் பிடிக்க சென்றபோது சுவர் ஏறி குதித்ததில் கால் முறிந்து விட்டது அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் புதிய தமிழகம் கட்சியில் இருந்தார் எங்க கட்சியில் கிடையாது.

நிருபர் : நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியதற்காக போலீசார் ஒருமுறை அவரை கைது செய்தார்களே, அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்பதான் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கி இருந்தார்கள் அந்த நேரம் அவர் எந்த கட்சியிலும் இல்லாமல் இருந்தார் அப்ப அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : ஏழாவது வகுப்பு பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது சாதி சண்டை போட்டு சக மாணவர்களின் சட்டையை கிழித்து போட்டாரே அப்ப ஒரு ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை மாணவராக இருந்தார் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

அப்படி என்றால் ஒருவன் எத்தனை கொலை செய்தாலும் பரவாயில்லை, எத்தனை வெடிகுண்டு சம்பவங்களை நடத்தினாலும் பரவாயில்லை?

ALSO READ:  அடுத்தடுத்த ஜாக்பாட்… நம் தமிழகத்துக்கு!

எத்தனை ரூபாய் கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை,

எத்தனை முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை,

அதோடு உங்கள் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அடித்து உடைத்தவன் என்றாலும் பரவாயில்லை,

ஏன் உங்கள் கட்சி தேசிய தலைவர் ராஜீவ் காந்தியை போட்டு தள்ளிய விடுதலைப் புலிகளோடு தொடர்பில் உள்ளவன் என்றாலும் பரவாயில்லை,

அவன் காங்கிரஸ் கட்சிக்கு வந்து விட்டால் அவனுக்கு தலைவர் பதவி கொடுத்து விடுவீர்கள் அப்படித்தானே?

நீங்க பாஜகவை வாஷிங் மெஷின் என்று சொன்னீங்க பாஜகவை விட பெரிய வாஷிங் மெஷின் காங்கிரஸ் தான்.

–சமூகத் தள வைரல் பகிர்வு–

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.