December 5, 2025, 12:43 AM
24.5 C
Chennai

காங்கிரஸ் என்ற வாஷிங் மெஷின்

selvaperunthagai ks alagiri edited - 2025

என் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையை ரவுடி என்று அண்ணாமலை சொல்லி விட்டார் அவரை ஒரு பிடி பிடிக்காமல் விடமாட்டேன் – சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் MP – இது செய்தி

இனி நம் கற்பனை உரையாடல்!

நிருபர் : ரவுடித்தனம் செய்ததற்காக ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முறை குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தார்களே அப்ப ஒரு ரவுடி கிடையாதா?

சசி : அது அவர் புரட்சி பாரதம் கட்சியில் பயணம் செய்த போது நடந்தது அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : சரி அவரை இன்னொரு முறை அதே ஜெயலலிதா குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : உங்க கட்சி அலுவலகத்தை அடியாள்களோடு வந்து அடித்து நொறுக்கிறாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா ?

சசி : அப்ப அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார் .

நிருபர் : ஆடிட்டர் பாண்டியன் வழக்கில் போலீஸ் பிடிக்க சென்றபோது சுவர் ஏறி குதித்ததில் கால் முறிந்து விட்டது அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் புதிய தமிழகம் கட்சியில் இருந்தார் எங்க கட்சியில் கிடையாது.

நிருபர் : நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியதற்காக போலீசார் ஒருமுறை அவரை கைது செய்தார்களே, அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்பதான் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கி இருந்தார்கள் அந்த நேரம் அவர் எந்த கட்சியிலும் இல்லாமல் இருந்தார் அப்ப அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : ஏழாவது வகுப்பு பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது சாதி சண்டை போட்டு சக மாணவர்களின் சட்டையை கிழித்து போட்டாரே அப்ப ஒரு ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை மாணவராக இருந்தார் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

அப்படி என்றால் ஒருவன் எத்தனை கொலை செய்தாலும் பரவாயில்லை, எத்தனை வெடிகுண்டு சம்பவங்களை நடத்தினாலும் பரவாயில்லை?

எத்தனை ரூபாய் கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை,

எத்தனை முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை,

அதோடு உங்கள் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அடித்து உடைத்தவன் என்றாலும் பரவாயில்லை,

ஏன் உங்கள் கட்சி தேசிய தலைவர் ராஜீவ் காந்தியை போட்டு தள்ளிய விடுதலைப் புலிகளோடு தொடர்பில் உள்ளவன் என்றாலும் பரவாயில்லை,

அவன் காங்கிரஸ் கட்சிக்கு வந்து விட்டால் அவனுக்கு தலைவர் பதவி கொடுத்து விடுவீர்கள் அப்படித்தானே?

நீங்க பாஜகவை வாஷிங் மெஷின் என்று சொன்னீங்க பாஜகவை விட பெரிய வாஷிங் மெஷின் காங்கிரஸ் தான்.

–சமூகத் தள வைரல் பகிர்வு–

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories