December 7, 2025, 4:42 PM
27.9 C
Chennai

அபகரிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்கும் மசோதா இது!

amitsha in parliament - 2025

அபகரிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்கும் (வக்பு வாரிய திருத்த மசோதா) விடுதலை திருநாள் இன்று!

மதசார்பின்மை என்ற பெயரில், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைத்த காங்கிரஸின் நரி தந்திரத்திற்கு முடிவு கட்டப்படும் நாள் இன்று !!

வக்ஃபு மசோதா என்ற பெயரில், சாமானிய மக்களின் உரிமைகளையும் உடைமைகளையும் பிடுங்கும் அதிகாரத்தை, 

ஒரு குறிப்பிட்ட வாரியத்துக்கு கொடுத்து, மத நல்லிணக்கத்திற்கு பெரும் சீர்கேடு விளைவிக்க நினைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு !!

நினைத்த மாத்திரத்தில் நிலங்களை உரிமை கோரும் அதிகாரம் வக்ப்பு வாரியத்துக்கு வழங்கப்பட்டது பல துஷ்பிரயோகங்களுக்கு வழி வகுத்தது !!

ஆன்மீகத்தில் இந்தியாவுக்கே முன்னோடியாக இருக்கும் தமிழகத்திலேயே பல கோவில்கள் இருக்கும் நிலங்களை வக்ஃபு வாரியம் உரிமை கோரியது  !!

அந்த ஆக்டோபஸ் கரங்களில் சிக்காத நிலமே இல்லையா என்று பீதி அடையும் அளவுக்கு, கட்டுப்பாடற்ற சீர்கேடுகளை நிகழ்த்தியிருந்தது முந்தைய UPA  அரசு!!

இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு முன்பே எழுந்தருளிய கோவிலையும், அந்தக் கோவில் இருக்கும் ஒட்டுமொத்த திருச்செந்துறை கிராமத்தையுமே வக்ஃபு நிலம் என்று உரிமை கோரியது அக்ரமத்தின் உச்சம்.

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரம் குன்றம் மலையையே அபகரிக்க முயன்ற சதி திட்டம், மக்கள் பேரெழுச்சியோடு தடுத்து நிறுத்தப்பட்டதும் சமீபத்திய நிகழ்வு !!

தமிழகத்தில் மட்டுமா இது நடக்கிறது ?

மத்திய பிரதேசத்தின் மக்கனி கிராமத்தில், பெரும்பான்மையாக இந்து சமுதாயத்தினரே வாழ்ந்து வந்த போதும்….

ஒரு சிவலிங்கம் அமைந்திருக்கும் இடம் முதற்கொண்டு, ஒட்டுமொத்த கிராமத்தையும் உரிமை கோரியது வக்பு வாரியம் !!

அந்த நிலங்களை தானமாக கொடுத்ததாக கூறப்படும் காதிர் கான் என்பவர் அந்த கிராமத்திலேயே வாழ்ந்ததில்லை என்ற தெரிந்த பிறகும் அந்த பிரச்சனையை  வக்பு வாரியம் விடவில்லை !

கர்நாடகாவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடந்து வந்த நிலையில், அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது இல்லை என்றும், 

வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான நிலம் என்றும் உரிமைக் கோரிய வாரியம் …., அதற்கு எதிராக நீண்ட  சட்டப் போராட்டம் நடந்ததும் வரலாறு…

அயோத்தியா ராமர் கோவில் பற்றி அறிந்தவர்களுக்கு, லக்னோவின் லட்சுமணன் கோவில் பற்றி அறிய வாய்ப்பில்லை !!

லட்சுமணன் கட்டிய கோவிலாக நம்பப்படும் இடத்தையே, வக்ஃபு வாரியம் உரிமை கோரி சட்டப் போராட்டம் நடத்துகிறது !!

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகாவிலேயே, எட்டு தீவுகளை உரிமை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் பிரச்சனை வெடித்ததும் நாம் மறந்து விட முடியாது !!

கோவில் நிலங்கள் மட்டுமா இப்படி ஸ்வாகா செய்ய வக்பு வாரியம் நடத்துகிறது. ?

ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழை விவசாயிகளின் நிலத்தையும் வக்பு வாரியம் விட்டு வைக்கவில்லை !!

தமிழ்நாட்டில், சத்தியமங்கலத்தில் அருந்ததியர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தையும் இந்த வாரியம் உரிமை கோரியது !!

40 ஆண்டுகளாக அந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு, அந்த நிலம் சொந்தமில்லை என்று கூறுவது எவ்வளவு பெரிய சமூக அநீதி… மற்றும் சூறையாடல் ?

ராணிப்பேட்டையில் 50 ஏக்கர் விவசாய நிலத்தை ஏழை விவசாயிகளிடமிருந்து அபகரித்து இந்த வாரியத்திடம் ஒப்படைத் த காங்.. திமுக கூட்டணியின் விவசாய விரோத அரசியலை நாம் மறந்துவிட முடியுமா ?

கேட்பாரற்று கிடக்கும் கோவில்களும் சாதாரண மனிதர்களும் மட்டும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைத்தால் அதுவும் முட்டாள்தனமானது….

அரசாங்கமே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு நில உரிமைகளை வக்பு வாரியம்  கோரியது  எவ்வளவு பேருக்கு தெரியும்  !!

சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் தலைமை அலுவலக நிலைத்தையே வக்ஃபு நிலமாக உரிமை கோரினார்கள் !

பாராளுமன்ற கட்டிடமே வக்ஃபு நிலம் என்று தைரியமாக சொல்லி பார்த்தார்கள் !!

கோலாப்பூரில் மகாதேவரின் ஆலயத்தின் அருகில் இருக்கும் நிலத்தையும் அபகரிக்க முயன்றார்கள் !!

எல்லாவற்றையும் விட 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்த மகா கும்பமேளா நடக்கும் இடத்தையும் வக்ஃபு நிலம் என்று உரிமை கோர பார்த்தார்கள் !!

வக்ஃபு வாரியார் திருத்த மசோதா என்பது, எவரின் உரிமையையும் பறிப்பதற்காக இல்லை !!

மாறாக இந்து கோவில்கள் மற்றும் சாதாரண மக்களின் உரிமையை பறிக்கும் காங்கிரஸ் அரசு போட்ட முந்தைய சட்டத்திற்கு ஒரு கடிவாளம் இட்டு சீர்திருத்தம் செய்யும் மசோதா !

பல நூற்றாண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்கும் மசோதா !!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” பாதையில்…

அனைத்து சமூகத்தினருக்கும் மாபெரும் பயன் அளிக்கக்கூடிய இந்த சீர்திருத்த மசோதாவை மனப்பூர்வமாக நாம் அனைவரும் ஏற்போம்…வரவேற்போம் !

எஸ். ஆர். சேகர்.
(மாநில பொருளாளர், தமிழக பாஜக.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories