December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

தமிழகத்திடமிருந்து தட்டிப் பறித்த விஜயன்! பாடம் கற்பாரா ஸ்டாலின்?

modi in vizhignam - 2025

விழிஞ்சம் துறைமுகத்தை தமிழகத்திடமிருந்து தட்டிப் பறித்த பினரயி விஜயன். இனியாவது பாடம் கற்றுக்கொள்வாரா ஸ்டாலின்?

மத்திய அரசுக்கு இணக்கமாக செல்வதை அடிமைத் தனம் என்று அர்த்தம் கொடுத்து.. எப்போதும் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தே மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த திமுகவிற்கு…. கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட், சரியான சவுக்கடி கொடுத்துள்ளது.

விழிஞ்சம் துறைமுகம் தமிழகத்திற்கு வரவேண்டிய திட்டம். சுற்றுச்சூழல் பாதிப்பு, மீனவர்கள் போராட்டம் என்று சகட்டுமேனிக்கு மக்களை தூண்டிவிட்டு அரசியல் ஆக்கியது திமுக. இன்று அந்த திட்டம் கேரளாவுக்கு சென்று விட்டது மோடி அதை துவக்கி வைத்துள்ளார்.

சுற்றுச்சூழல், உயிரியல் என்று பேசிய சுற்று சூழல் வியாதிகள்! 2021 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, நம்ம ஊர் கனிம வள கொள்ளையைப் பற்றி வாயை திறக்கவில்லை…. அது ஒரு புறம் இருக்கட்டும்…

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமர்ந்த மேடையிலேயே, காங்கிரஸ் கட்சியின் சசிதரூரும்…. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வரும் ஒருங்கே அமர்ந்து, கேரளாவுக்கான வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கிறார்கள்! ஆனால் இந்த திராவிட ஆடல் திமுகவோ… ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை நீக்குவதும், ரூபாய் சின்னத்தை மாற்றும் “தாழ்ச்சி” அரசியலை முன்னெடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்….

அதானி என்று கூறினாலே அய்யோ அம்மா என்று கதறும் அதே கம்யூனிஸ்ட் கட்சி…. தன்னுடைய மாநில வளர்ச்சி என்றவுடன், கப் சிப் ஆகி அதே அதானியிடம் இந்த துறைமுகத்தை ஒப்படைக்கிறது…

வாக்கு அரசியல் வேறு, வளர்ச்சி அரசியல் வேறு என்பதை கேரள கம்யூனிஸ்ட்
முழுதும் உணர்ந்து இருக்கிறது இதைச் சுட்டிக்காட்டிய மோடி ஒரே மேடையில் காங்கிரஸ் எம் பி … கம்யூனிஸ்ட் முதல்வரும் ..அவர் விரும்பாத அதானியும் இருப்பதை பார்த்து சிலர் (இண்டி கூட்டணி) இன்று தூங்காமல் இருக்கப் போகிறார்கள் என்று நக்கலும் நையாண்டிமாக பேசியுள்ளார்.

மத்திய அரசுடன் மோதல் போக்கு அரசியலில் மட்டும் திமுக செலுத்திய கவனம்… வளர்ச்சி அரசியலை விலக்கியதன் விளைவு.. இதனால் தமிழகம் இன்று கடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்தின் நலனை அடமானம் வைத்தது திமுக !காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை காற்றில் பறக்க விட்டது திமுக. இப்போது மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களையும் தடுத்து இருக்கிறது திமுக !

மாநில நலன் சார்ந்த அரசியலில், மத்திய அரசின் துணையும் அதனுடன்
இணக்கமும் தேவை என்பதை கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் உணர்ந்து விட்டார். தமிழக முதல்வர் நிச்சயம் இதை என்றுமே உணரப் போவதில்லை !!ஸ்டாலினின் உண்மை முகத்தை மக்கள் பார்த்து விட்டார்கள்.

2026 இல் மத்திய அரசின் டபுள் எஞ்சின் சர்க்கார் தமிழகத்தில் அமைவது முக்கியம் என்பதை தமிழ் மக்கள் உணர தொடங்கி விட்டார்கள்.

  • எஸ். ஆர். சேகர்.
    மாநில பொருளாளர். தமிழக பாஜக.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories